கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
ஞாயிறு, பிப்ரவரி 26, 2012
அறிவிப்பு பலகை
என் வீட்டிற்குள் வர
அழைப்பு மணியை அழுத்தவும்
நாய்கள் ஜாக்ரதை என்கிற
அறிவிப்புப் பலகை இல்லை
கவசம்
நீ என்னைப் பின் தொடரும் தருணங்களில்,
உன்னால் பொறுக்கப் படும் கற்களை
நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
நமது இடவெளி நீளும் போது,
நீ எறிகிற கற்களால்
எனக்குச் சேதம் வராமல்
என்னை நான் தற்காத்துக் கொள்ள
கவசம் தேடிக் கொள்கிறேன்..
புன்னகையில்...
நித்தமும்
எச்சரிக்கையாக
இருக்கும் போது தான்
ஒன்னை நினைத்து
உன்னை எழுதுகிறேன்.
.
‹
›
முகப்பு
வலையில் காட்டு