கடல் நுரைகளும் என் கவிதையும் ...
உனது மனதில் வருவது எதுவாயினும் அதை உடனே எழுது, நேர்மையுடன். 'ஓஷோ'
வியாழன், ஜனவரி 19, 2012
தொலைந்து விட்டது
நான்
என் இதயத்தை
மூடிய பிறகு
நீ
உன் கண்களை
அகல விரித்தாலும்
திரும்பாது
தொலைத்த நம்பிக்கை..
சுரண்டல்
ஒரே ஒரு துடைப்பக்கட்டை
வியாபாரத்திலும்
ஒரு ஏழையின் உழைப்பு
சுரண்டப்பட்டிருக்கு
சொகுசு வேண்டாமென
சுகத்திற்கு ஏசி’யைக் கூட
ஏற்க மனமில்லை
ஒரு ஏழையின் உழைப்பு
சுரண்டப்பட்டிருக்கும் என்பதால்
குளிர்
இரவெல்லாம்
உறக்கமில்லை
மழைக் குளியலில்
உன்னோடு
பூட்டு
பெரிய பெரிய பூட்டுகள்
அகல விரியும்
திருடர்களின் கண்கள்
‹
›
முகப்பு
வலையில் காட்டு