ஞாயிறு, மார்ச் 02, 2014

எழுத்தாளர் ப.சந்திரகாந்தம் மறைவு

ஆளப்பிறந்த மருது மைந்தன், அமுதசுரபிகள், 200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள், சாதனைப் படிகளில் சாமிவேலு போன்ற அரசியல் வரலாற்றுப்பின்னணியில் படைக்கப்பட்ட நாவல் மற்றும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்... 

நூற்றுக்கணக்கான சிறுகதைகள். நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்கள், நூற்றுக்கணக்கான தொடர்கள், ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் உலக சினிமா கட்டுரைகள்.. பத்திரிகையாளர், ஊடகவியலாளர், என குறைந்தது ஐம்பது ஆண்டுகாலம் (அதற்கு மேலும்) ஊடகத்துறையில் இருந்து வருபவருமான...

தலைசிறந்த இலக்கியவாதி என்கிற மகுடத்தை, மலேசிய பத்திரிகைத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய மறைந்த ஆதிகுமணன் அவர்களின் மூலமாக மனப்பூர்வமாக சூட்டப்பற்ற இலக்கியவாதியுமான...

தமிழகத்தில் கரிகால சோழன் விருது பெற்றவருமான...

இறக்கும் இறுதி மூச்சுவரை பத்திரிகைத்துறை மற்றும் நாடக டாக்குமெண்டரி தயாரிப்பு என தமது பொழுதினை இலக்கியம் எழுத்து என்கிற வட்டத்திற்குள்ளேயே அமைத்துக்கொண்ட துடிப்புமிக்க தமிழ்நேசன் ஞாயிறு பதிப்பாசிரியருமான...

எனது இனிய நண்பருமான...

திரு. ப.சந்திரகாந்தம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக