புதன், நவம்பர் 30, 2011

இலக்கியக் காதல்

நீ யாரை அனுப்பினாலும்
எனக்கு உன்னைத்தான் பிடிக்கும்
நானும் பேராசைக்காரி
உன்னைப்போல்..

நானும் என் புகைப்படமும்

ஆபாசம்

பாலில் எனக்கு,
தயிர் பிடிக்கும்
மோர் பிடிக்கும்
வெண்ணெய் பிடிக்கும்
நெய் பிடிக்கும்
அதன் ஆடை பிடிக்கும்
பால் கோவா பிடிக்கும்
பால் குளியல் பிடிக்கும்
பால் அபிஷேகமும் பிடிக்கும்
பால் தீர்த்தம் பிடிக்கும்
பால் சாதம், பாயாசம், குழம்பு பிடிக்கும்
அந்த பாலையே பச்சையாகவோ/சூடாகவோ, ரொம்ப பிடிக்கும்..

பசுவின் காம்பு தான் பிடிக்கும் என்பவர்களை
நான் ஒண்ணும் செய்ய முடியாது.