வியாழன், பிப்ரவரி 07, 2013

வால் பகுதி

`விரால் சூப் சாப்பிடவேண்டும் போல் இருக்கிறது, வாங்கிட்டு வாம்மா.’ என்றார் மாமி. கேட்டு இரண்டு வாரமாகிவிட்டது.

இன்று அலுவலக அருகில் இரவுச் சந்தை. இந்த விரால் விவரம் சட்டென்று ஞாபகத்திற்கு வரவே, வரும் வழியில் அச்சந்தைக்குச் சென்றேன். அங்கே நம்மவர் ஒருவர், இதுபோன்ற ஆற்று சேற்று மீன்களை கணிசமான விலையில் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் உள்ள மீன்கள் அனைத்தும் உயிருடனேயே இருக்கும்.

பெரிய வாளியில் இருந்த விரால் ஒன்றினைக்காட்டி நிருத்துபபார்க்கச் சொன்னேன்... ஒன்றரை கிலோ வந்தது. கிட்டத்தட்ட நாற்பது ரிங்கிட். நிருவையில் நிற்கவேயில்லை அந்த விரால். இங்கேயும் அங்கேயும் குதித்தது.

கையில் வைத்திருந்த ஒரு இரும்புத்தடியினால் அதன் தலையில் ஓங்கி அடித்தார். சாகவில்லை. வாய் பகுதியை ஒரே வெட்டு வெட்டினார். துடித்தது. செவுல் செதில்கள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்தார். கழுவினார். துண்டு போட ஆரம்பித்தார். முதலில் வால் பகுதியில் ஒரு துண்டு.. பிறகு தொடர்ந்து ஒவ்வொரு துண்டாகப்போட்டார் .... பையில் போட்டுக்கட்டும் வரை வால் துண்டின் அதிர்வு நிற்கவேயில்லை. துடித்துக்கொண்டே இருந்தது அந்த வால்.

வீட்டிற்கு வந்தவுடன்..

`அம்மா, விரால் வாங்கிவந்துள்ளேன், சூப் செய்யவா? சொல்லிக்கொடுங்க, எனக்குத்தெரியாது..’ என்றேன்.

வேலைக்காரி மூக்கைச் சிந்திக்கொண்டிருந்தாள்..

`அப்ப நி நாங்கிஸ்?’

`காக்கா.. நென்னே, டாரி தாடி லெமாஸ், தாங்கான் காக்கி செமுவா கெபாஸ்.. சயா தக்கூட்..’

`யா கா..! அப்ப ஜடி?’

`தாக் தாவ்வு க்கா.. பாடன் டியா புன் டிங்கின் சாங்ஙாட்.’

`ஓ..ஒகே ஒகே, ஜங்கான் நாங்ஙிஸ்...’

அறைக்குள் நுழைந்தேன்..

`யம்மா, என்னாச்சு?’

`காலையிலிருந்து ஒருத்தி வந்து என்னிய கூப்படறாம்மா.. உயரமா இருக்கா.. என்னுடைய துணியெல்லாம் துவைக்கறா... நான் வரலே’ன்னு சொல்லிட்டேன்..’

`அப்படியா, யார் அது?’

`பைடுதல்லி மாதிரி இருக்கு..’

`ஓ..’

`வீடெல்லாம் நல்லா சுத்தமா கூட்டி, மேக் ஆப் போடும்மா..!’

`ஏன்?’

`ச்ச்சே, நாளைக்கு எல்லோரும் வருவாங்கதானே.. நல்லாவா இருக்கும்..!’

`ஏன் வரணும்? யாரும் வரமாட்டாங்க...’

`ஓ..ஓவ்வ்வ்.. ஒவ்வ் எவ்வ்வ்..ல்ல்ல்ல்ல்...லலால்லா.’ என்னமோ சொல்ல வாய் எடுத்தார்.. கண்கள் சொரூகின, கைகள் நடுங்கின, அப்போது அவரின் நாக்கு .. துடித்தது.

அது, துண்டு போடப்பட்ட மீனின் வால் பகுதி துடித்ததை எனக்கு ஞாபகப்படுத்தியது..

நல்லவேளை, அம்மாவை முதியோர் இல்லத்தில் விடவில்லை. அங்கே இருந்திருந்தால், இதுபோன்ற நிலையில் யார் பேச்சுத்துணைக்கு ஆதரவாய் இருந்திருப்பார்கள்..!! பிள்ளைகள் போல் வருமா?