புதன், பிப்ரவரி 06, 2013

மாமி கதை ( சிரி சிரி)

`இது யார் வீடு?’


`இது நம்ம வீடு.’


`ஓ..அம்மா வீடா?’


`ஆமாம்...’


`நீ இங்கேயே தூங்கும்மா.. நேரமாச்சு எப்படி வீட்டுக்குப்போவ?’


`சரி தூங்கறேன்..’


`உம் புருஷன் பேர் என்னா?’


`நட்ஷணா..’


`ஓ..நட்ஷணா பொண்டாட்டியா நீ..’

`ம்ம்..’

`எங்கே அவன்?’

`தோ, இப்பதானே மேலே போனார்..’

`ஓ, நட்ஷணா, வீடு வாங்கிட்டானா?’

`ம்ம், வாங்கிட்டார்..’

`நல்லா இருப்பானம்மா, எவ்ளோ கஷடப்பட்டான்.., இவ்வளவு பெரிய வீடு இருக்குமா, அவன் வீடு..?

`ஆங்..இவ்வளவு பெரிய வீடுதான்’

`அவனையும் இங்கேயே தூங்கச்சொல்லு..’

`சரி தூங்கச்சொல்றேன்..’

வேலைக்காரியைப்பார்த்து..`அப்போ இவ எங்கே தூங்குவா?’

`அவளும் .. இங்கேயே..’

`அவ..அங்க அங்க மூத்திரம் அடிக்கறாம்மா.. ஒரே நாத்தம்.. வுவக் வாந்தி வருது..’

வாய்விட்டு சிரித்துவிட்டேன்..`ஹஹஹ..அப்படியா?’

`சிரி, நல்லா சிரி.. கிட்டவா ஒரு விஷயம்.. மனசிலேயே வைச்சுக்க....
வீட்டுக்கு யாரோ வந்தாங்க.. அவகூட ரொம்ப நேரம் பேசினா.. இரெண்டுபேரும் நல்லா படுத்து தூங்கினாங்க.. நான் கூப்பிடறது கூட கேட்கல..’

மாமி கதை (கண்ணு தெரியல)

`கண்ணு தெரியமாட்டேங்கிறது’ ம்ம்மா’

`அதான் கண்ணாடி புல்லி அனுப்பிடுச்சு இல்லே.. போட்டுக்கவேண்டியதுதானே..!’

`அத போட்டாலும் தெரியமாட்டேங்கிறது..’

`அதுக்கு, நான் என்ன செய்ய.. ?’

`ஆஸ்பித்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போம்மா.. செஃக் பண்ணீட்டு, கண்ணு உரிப்பாங்க..’

`ம்ம்..சரி சரி.. சீனப்பெருநாள் லாங் லீவு வருதில்லே, அப்போ பார்க்கலாம்..ஹ்ம்ம்’

`ஹ்ம்ம்.. ’

டீவி பார்க்கிறார்...பழைய பாடல்கள் ஓடுகின்றன..

`அது யாரு சில்க்’ஆ..? முத்துராமன் மகன் அப்படியே இருக்கான்(ர்).. ! பிகராஷ் அப்பா.. பேரு என்னாம்ம்மா...?

`ம்ம்..தியாகராஜன்..’

`ஓ.. சேகரும் இருக்கான்(ர்) ..’

`ம்ம்ம்ம்... கண்ணுதான் நல்லா தெரியுதே..!!’

`ஆஸ்பித்திரிக்கு போனாத்தான், இன்னும் நல்லா தெரியும்..!’

`எது? சினிமா நடிக நடிகர்களையா? ஹிஹி’