சனி, ஏப்ரல் 19, 2014

தெனாலிராமன்

வடிவேலுவின் மறுபிரவேசம். இரட்டைவேடம்.

இனி பயணம் தொடரட்’டும்.. என்கிற வாசகத்துடன் உற்சாகமாகப் பயணிக்கிறது திரைக்கதை.

அவரின் நகைச்சுவையும் உடல்மொழிகளை(லை)யும் மிஸ் செய்கிறவர்களுக்கு இந்தப்படம் நல்ல விருந்து.
அரசியலில் மூக்கை நுழைத்து பாதிப்புக்குள்ளாகி, அதனால் தாம் பட்ட அவஸ்தைகளை ஆங்காங்கே வசனமாகப் பேசுகிறார். ஏன் தனிமையில் இருக்கின்றாய்.? என்று கேட்கின்றபோது, `நிறைவாகும்வரை மறைவாக இருப்பதே சிறப்பு.’ என்கிற பதிலைக் கூறுகையில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்குத் தகுந்த பதில் வழங்குவதாகவே எமக்குப் படுகிறது.

பெரிய எதிர்ப்பார்ப்புடன் மக்கள் திரையரங்கில் திரண்டிருந்தனர். ஏமாற்றம் இல்லை. மக்கள் காட்சிக்குக் காட்சி கைத்தட்டி ஆரவாரம் செய்வதைக் காண்கையில், நிஜமாலுமே ரசிகர்கள் வடிவேலுவை `மிஸ்’ செய்துள்ளார்கள் என்பது வெள்ளிடைமலை.

அரச சபையில் மந்திரிகளில் ஒருவராக தெனாலிராமன்  நியமிக்கபபடுகிறார். அரசரைக் கொலை செய்யவருகிறார். பிறகு கதை வேறுபக்கம் நகர்கிறது.

அரசராகவும் தெனாலிராமனாகவும் வடிவேலுதான். அரசர் அப்பாவி. தெனாலிராமன் அறிவாளி. தெனாலிராமன் செய்கிற அனைத்து சேட்டைகளும் படத்திற்குத் திருப்புமுனை. சிறுவயதில் ஆரம்பப்பள்ளியில் பயில்கின்ற காலகட்டத்தில் கேட்கப்பட்ட தெனாலிராமன் கதைகளை படத்தின் காட்சிக்கு ஏற்ப மிகவும் நகைச்சுவையாக நுழைத்திருக்கின்றார்கள். `எல்லாம் நன்மைக்கே’ என்கிற கதை தொடங்கி `பானைக்குள் யானை’, `கிடைக்கின்ற பரிசில் பாதி’ என்கிற கதைகளையெல்லாம் என்றோ எங்கேயோ கேட்டதுபோலவே இருந்தாலும், வடிவேலுவின் பாடிலங்குவேஜ்’யின் மூலம் மீண்டும் அவைகளை உயிர்ப்புடன் கண்டு மகிழ்கையில் மனம் குதூகலிக்கிறது.

பேரங்காடிகள் திறக்கப்பட்டால் சிறுவனிகர்களின் பாடு என்னவாகும் என்கிற சர்ச்சை சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்திருந்ததை இத்திரைக்காவியத்தில் இடைசெருகலாக நுழைத்துள்ளார்கள்.

வயிறுகுலுங்க சிரிக்கவைத்த படம் என்று சொல்லமாட்டேன். இருப்பினும் பல காட்சிகளை நான் ரசித்துப்பார்த்தேன். அரச சபையில் நிகழ்த்தப்படுகிற காட்சிகள் அனைத்தும் ரகளையானது.

முப்பத்தாறு மனைவிகளில் ஒருவர், தம்மிடம் எப்படி மயங்கினார் என்று மகளிடம் கதை சொல்லுகையில், `பார்த்தும்மா, நீ எதும் இந்த யுக்திகளைக் கடைப்பிடித்து விடப்போகிறாய். பிறகு நம்மை சொம்பு பரம்பரை என்று முத்திரை குத்தி விடுவார்கள்.. அதுவும் வெறும் சொம்பு... என்று சொல்கிற காட்சியில் தியேட்டரில் கலகல சிரிப்பு. மனைவிகளின் ஒருவரைக் காணச் செல்லுகையில் எங்கே நுழைவது, எங்கே செல்வது என்று தள்ளாடும்போதும் .. உடல்மொழி பிரமாதம். நல்ல நடிகர் வடிவேலு.

அரசர் வடிவேலு சராசரி மக்களோடு கலந்து படும் அவஸ்தைகள் அனைத்து செம காமடி.

அப்போ அப்போ அரசியல் பேச்சுகள்/வம்புகளும் தலைகாட்டுகிறது. யாரைப்பற்றிப்பேசுகிறார்கள் என்று மலேசியாவில் இருக்கின்ற எங்களுக்கே புரிகிறபோது, தமிழ்நாட்டவர்களுக்குச் சொல்லவா வேண்டும்.!?

வடிவேலுக்கு டூயட், ரொமண்டிக் லூக் எல்லாம் ... ஷப்ப்ப்ப்ப்பா.. அதுவும் அழகான பெண்நாயகி ஜோடி.

சீரியஸ் வடிவேலு வருகிறபோது, வடிவேலுவாகவே தெரியவில்லை. நடையில் மிடுக்கு. சிவாஜிகணேசன் திருவிளையாடல் படத்தில் கடற்கரையோரம் நடப்பாரே, அதே போல் இருந்தது.
நாகேஷ் அவர்களை எல்லா வேடத்திலும் ரசிக்கமுடிந்தது. ஆனால் வடிவேலு நகைச்சுவை செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும். வயதான தோற்றமும் வந்துவிட்டது வடிவேலுவிற்கு.

ராதாரவியின் நடிப்பு `ஓவர் அக்டிங்’

அழகுப்பதுமை நாயகி.

நிச்சயம் குழந்தைகளைக் கவரும் படம் இது. குடும்பத்துடன் சென்று காணலாம்.

happy அண்ணாச்சி