புதன், டிசம்பர் 25, 2013

முரண்படுகிறேன்..

நிறைய படித்தவர்களை விட இலக்கியவாதிகள் உயர்ந்தவர்கள் என்று எப்படிச்சொல்கிறீர்கள் அம்மா.?.

எல்லா படித்தவர்களுக்கும் மனோத்தத்துவம் தெரியாது. ஆனால் இலக்கியவாதி என்பவர் உளவியல் அறிஞர். 

அப்படியென்றால் உங்களை நீங்கள் உளவியல் அறிஞர் என்கிறீர்களா அம்மா?

நான் இலக்கியவாதி இல்லையே..!

எழுதுகிறீர்கள்..?

எழுதுபவர்கள் எல்லோரும் இலக்கியவாதியா?

நீங்கள் சொல்வது அப்படித்தானே இருக்கு..!?

நான் சொல்வது உனக்கு விளங்கவேண்டுமென்றால், நீ ஆழ்ந்த வாசிப்பு கொண்டிருக்கவேண்டும்..!

அப்போ என்னிடம் ஆழ்ந்த வாசிப்பு இல்லையா? நான் ஒரு மருத்துவர்.

யாராக இருந்தாலும் இலக்கியவாதியிடம் நிறக முடியாது.

நீங்கள் முரண்படுகிறீர்கள் அம்மா.!

(உரைக்கு முற்றுப்புள்ளி...)