திங்கள், ஜனவரி 30, 2012

ஓய்வுப்பொழுதுகளில் உன் நினைவுகளில்


ஆன்மா
மற்றவர்களைப் பற்றி
எழுத நினைக்காதபோது,
எழுதுகோல்
உன் ஆன்மாவை நோக்கிப்பாய்கிறது
குருதியாய் சில கவிதைகள் 

வாழ்வு
எத்தனையோ
விசில்களில்
இன்னும் வேகாத
இறைச்சிகளாய்..

நிவாரணம் சாபம்

 வலியால் உதிக்கின்ற
வார்த்தைகள் யாவுமே..
வலியால் உணரப்பட
எழுதுகிறேன் ஒரு
நிவாரண சாசனம்...

நீ வரைந்த
சொற்கள் யாவுமே
நிரந்தரமாய்
தனிமையின் நிழல் வட்டமாய்
பிரபஞ்சத்தில் என்னோடு
இன்றும் என்றுமே..