வெள்ளி, ஜனவரி 20, 2012

ஒத்துப்போகிறது

எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒருவர்
எனக்காகவே எழுதிக் கொண்டிருக்கிறார்
சில கவிதைகளை
நான் யாரென்று தெரியாமலேயே..

எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒருவரின் எழுத்தை 
எனக்காகவே எழுதப்பட்டதாக
நினைத்து 
நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்

எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒருவரின் பேனா
என் உணர்வுகளை
எழுதிக்கொண்டிருக்கிறது
என்னை யாரென்று தெரியாமலேயே...

அப்போ நான் யார்?

படைப்புகளை

ஒரு பள்ளி ஆசிரியருக்கு
அனுப்பினேன்
புள்ளிகள் வழங்கப்பட்டது..

ஒரு எழுத்தாளருக்கு
அனுப்பினேன்
குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன..

பத்திரிக்கையாளருக்கு
அனுப்பினேன்
பதிலே வரவில்லை

வாசகருக்கு
அனுப்பி வைத்தேன்
அவர் இன்னும் அதை வாசிக்கவில்லை..
வாசகர் வாசகர் தான்..

இவர்கள் தான் மக்கள்

நட்பு’
‘ஆண் பெண் நட்பு!!?”
நகைக்கப்பட்டது.!

காதல்’
“ஆமாம், காதலாம்
இது’களும்.. நம்புதுக..!”

காமம்’
அதுவும்
பொய்யாக்கப்பது...!

பிரிவு’
இது தெரிந்ததுதானே
நினைத்தேன்
நடக்குமென்று..!

விரக்தியின் விளிம்பில்
வதந்திகள் பரப்பப் பட்டது
 “அவள் விபச்சாரி..!”

இப்போ பேசிக்கொள்கிறார்கள்
“கதை தெரியுமா?
நெருப்பில்லாமல்
புகையாதே..!”

இவர்கள் தான் மக்கள்.