திங்கள், செப்டம்பர் 02, 2013

யோகா..

தொலைபேசியில்...

` ஹாலோ கலா, நீ இருக்கும் இடத்தில் யாராவது யோகா சொல்லித்தருகறார்களா?’

`ஹாஹாஹா’

`என்ன சிரிப்பு.? முன்பு அங்கு எங்கோ ஓர் இடத்தில் சொல்லித்தந்ததாக ஞாபகம்.’

`ஹாஹாஹா’

`ஏன் இப்படி லூசு மாதிரி சிரிக்கற?.. உன் மவ படிக்கிற பள்ளியில் கேட்டுப்பார்க்காலாம்..!’

`ஹாஹாஹா.’

`நிப்பாட்டும்ம்மா, இது ஒண்ணும் அவ்வளவு பெரிய காமடி இல்லை..’

`ஹாஹாஹா.’

`அங்கே ஒரு கோவில் இருக்கே..அங்கு விசாரிக்கலாம்னு நினைக்கிறேன். எப்படி. விசாரிக்கிறீயா?’

`ஹாஹாஹா.’

`அட உதவி கேட்டா ஏன் இப்படி சிரிக்கிற.? என்னிய பார்க்க எப்படி இருக்கு.?’

`ஹாஹாஹா’

`முன்பு நம்மா எல்லோரும் ஒரு மாஸ்டர்கிட்ட போனோமே, அவர் இப்போ எங்கே யோகா க்ளாஸ் சொல்லித்தருகிறார்?’

`ஹாஹாஹா’

`என் வீட்டுக்கிட்ட ஒரு சீனர் சொல்லித்தருகிறார். மாதக்கட்டணம் ரிங்கிட் மலேசியா 200. நம்ம கலையை நாம் எப்படி அவரிடம்ம்ம்..!!?’

`ஹாஹாஹா,’

`ஹூக்கும்..என்ன சிரிப்பு..?’

`நல்லா சாப்பிட்டுச்சாப்பிட்டு குண்டான பிறகு, யோகா மாஸ்டர தேடவேண்டியது.. இதுதானே நாம்.! நானும் தேடுகிறேன். கிடைத்தால் இருவரும் கலந்துகொள்வோம்..எனக்கும் உக்கார்ந்தா எழுந்திரிக்க முடியல.’

`ஹாஹாஹா..’

மக்கள் ஓசை பத்திரிகைக்கு ஒரு கேள்வி..

போகிறபோக்கில் கதை கட்டுரை எழுதிவிடலாம் ஆனால் எதிர்வினை ஆற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதனை இன்று மக்கள் ஓசையில் வெளிவந்த முனைவர் ஐயா ரெ.கார்த்திகேசு தொடுத்திருந்த எதிவிர்வினையில் கண்டுகொண்டேன். அதிர்ந்தும் போனேன். 

ஐயா, நீங்கள் ஒரு பேராசிரியர் மற்றும் மலேசிய இலக்கிய ஜாம்பவான் . இப்படியா - குளறுபடியான ஒரு எதிர்வினையைக் கொடுப்பீர்கள்..? சராசரி வாசகர்களோடு நீங்களுமா? 

தனிநபர் தாக்குதல் இல்லாமல் பொதுவான கருத்தாக வந்திருக்கவேண்டிய ஒரு எதிர்வினையில் வரிக்கு வரி பதிலடி என்கிற பெயரில் தனிப்பட்ட ஒருவரின் பெயரை இணைத்திருப்பது, வாசிப்பவர்களை சோர்வில் ஆழ்த்துகிறது.

உங்கள் தரப்பு நியாயங்களை யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அழகாகக் கோர்த்திருக்கலாமே, சம்பந்தப்பட்டவர் என்கிற முறையில் அதில் உங்களுக்கு முழு உரிமையும் பங்கும் உண்டு என்கிறபோது.!

இறுதியாக டாக்டர் சண்முகசிவா ஏன் வந்தார், இந்த கருத்துமோதலில்? எல்லாக்கதவுகளையும் மூடிவிட்டு, ம.த.எ.சங்கத்தைத் துதிபாடும் கடிதங்களாக வந்துகொண்டிருக்கிறனவே - இரண்டுவாரங்களாக.. என்னாச்சு?