புதன், ஜூலை 25, 2012

இந்த இரவில் கூட

நான் இருக்கின்றேன்
பாடிக்கொண்டிருக்கின்றேன்
சாமான்களை உருட்டிக்கொண்டிருக்கின்றேன்
கதவை திறக்கின்றேன்
கிரிச் என்கிற சத்தத்துடன் மூடுகின்றேன்
கால்கள் தரையில் உரசுவதைப்போல்
நடக்கின்றேன்
நீரை கீழே விடுகின்றேன்
`ஸ்வீட்ச்’ஐ தட்டுகின்றேன்
மின் விசிரியை சுழல விடுகின்றேன்
மேஜையில் தாளம் போடுகின்றேன்
`ஹம்மிங்’ செய்கிறேன்
உட்கார்ந்திருக்கின்ற நாட்காலியை
முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டிருக்கின்றேன்
வானொலி தொலைக்காட்சியை
முடக்கிவிடுகின்றேன்
தும்முகின்றேன்
கொட்டாவி விடுகின்றேன்
கொசு அடிக்கின்றேன்
கை விரல்களை நெட்டி உடைக்கின்றேன் 
சொந்தமாகவும் பேசிக்கொள்கின்றேன்
இப்படியெல்லாம் அமைதியைக் குலைப்பதால்
நான் உயிரோடு இருக்கின்றேன்.!


மனசு

மனசு இன்று பூக்கவில்லை
மனசு இன்று மகிழவில்லை
மனசில் இன்று அமைதியில்லை
மனசில் எதோ ஒரு வலி
மனசில் எதோ ஒரு சிந்தனை
மனசே சரியில்லை
கவிதையும் வரவில்லை