புதன், மார்ச் 07, 2012

வர்ணனை

சில பெண்களின் அழகு 
வர்ணிக்கப்படும் போது, 
நானும் கொஞ்சம் 
எட்டிப் பார்க்கிறேன் 
நிலைக் கண்ணாடியை.

கூலி

சலவை செய்யும் போதெல்லாம், 
அவரின் பாக்கெட்டுகளிலிருந்து 
கிடைக்கப்பெறும் 
சில்லரை காசுகளும் 
நனைந்த நோட்டுகளும் 
எனக்குக் கூலி கொடுத்துக்கொண்டிருக்கிறது 
பல வருடங்களாக.

சோறு

கவிதையைப்பற்றி 
யார் எப்படி பயமுறுத்தினாலும், 
நான் வடிப்பதை மட்டும்
நிறுத்தவே மாட்டேன்...

மெயில்

உனது பதிலுக்காக
காத்திருக்கும் போது
எனக்குக் கேள்வி
அனுப்பியவர்களை
பழிவாங்கினேன்

புனைவுப் பின்னணியில்.....

எழுதும் கதைகளை
நிஜமாக்க..
நிஜவாழ்கையே
புனைவுகளுக்கு
தாரைவார்க்கப்படுகிறதா?

கதை நிஜமா அல்லது
நடைமுறையில்
நடந்து விட்டதெல்லாம்
கற்பனையா?

ஒத்து ஊதுவதற்கு
ஆள் சேர்க்கப்படுகிறதா, அல்லது
ஓட்டி ஓட்டி விரட்டியடிப்பதற்கு
ஆள் சேர்கப்படுகிறதா?

எல்லாமும்
நாடகமாய்
நடைமுறையையும்
வேடமுமாய்..!!

கொஞ்சம் தீர்க்கப்பார்வை
தரிசித்து விட்டதால்
நானும் விலகிக்கொள்கிறேன்
சாதாரண வாசகியாய்...