சனி, நவம்பர் 26, 2011

உறவுகள்

குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும், ஒரு முக்கிய உறவினர் ஒருவருக்கும் ஒரு பிரச்சனையில் வாக்கு வாதம் (வைச்சுக்குங்களேன்). 

அப்போ, நீ ச்சீ, நான் ச்சீ’ன்னு சண்டை போட்டுக்கொள்கிறார்கள் (வைச்சுக்குங்களேன்). 

அந்த உறவிற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை (வைச்சுக்குங்களேன்)..

இந்த நிலையில், அந்த உறவுக்காரர், நம்மை அவரின் வீட்டு வீஷேசத்திற்கு அழைத்துள்ளார், சம்பந்தப்பட்ட எங்க வீட்டு உறுப்பினரையும், பிரச்சனைகளை மறந்து ஒரு மரியாதைக்காக அழைத்துள்ளார், வற்புறுத்தவில்லை (வைச்சுக்குங்களேன்).

அப்போது நம் வீட்டில் உள்ளவர்கள் நமக்குப் போன் போட்டு நீ அந்த விஷேசத்திற்குப்போக வேண்டாம், எங்களுக்கு (ஆண்கள்) மரியாதை இல்லாத இடத்தில் உனக்கு என்ன வேலை? இப்படிச்சொல்கிறார்கள் (வைச்சுக்குங்களேன்). அப்போது உங்களுக்குக் கோபம் வருமா வராதா?

இவர்களாய் வாய் கொழுத்துப்போய் வீன் சண்டை போடுவார்களாம். நாம், நமக்கு நம் குடும்ப கௌரவம்தான் முக்கியம், நானும் பகைத்துக்கொள்வேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?

இன்று விரோதியாக்கிகொண்டு, நான் ’உம்ம்’ ‘உஹும்’ என்றால், எங்க வீட்டுக் குஞ்சு குசுமாளங்கள் எங்கும் நகர மாட்டார்கள் என காண்பிப்பதற்காக, தற்காலிகமாக மீசையை முறுக்கிக்கொண்டு (மீசை இல்லை, ஒரு உதாரணம்) நாளையோ அல்லது நாளை மறு நாளோ எங்கேயாவது ‘தண்ணீ’ போட்டுக்கொண்டு பல்லைக்காட்டி உட்கார்ந்திருந்தால் என்ன பண்னுவது? இது நிச்சயம் நடக்கும் ஏன்னா, இங்கு யாருக்கும் கொள்கை என்பது கிடையாது.

அதனால நான் போவேன்.. காரணம் நான் ஒருவரோடு பகைத்தால், ஒரு நகைப்போடு நட்போடு ஒதுங்கிக்கொள்வேன்..... (இவனுங்க ஒரேடியா பிணைவார்கள் பின்னே சண்டை போட்டுக்கொள்வார்கள். அப்பறம் பார்த்தா, சேர்ந்துக்கிட்டு கும்மியடிப்பானுங்க.. தெரியாத பின்ன)

இது தேவையா?