வெள்ளி, நவம்பர் 29, 2013

குரு வருவார்

இன்று மதிய உணவின் போது, எனது மூன்று நாள் `மைஃக்ரென்’ தொல்லைக்கு மருந்து எடுக்கலாமென்று, அருகில் இருந்த கிளினிக் ஒன்றிற்குச்சென்றேன். மருந்து எடுத்துவிட்டு அப்படியே சாப்பிடச்செல்லலாம் என்றும் நினைத்திருந்தேன். 

தோழியும் வருவதாகச் சொன்னாள், பிறகு அவளுக்கு எதோ பிரச்சனை வர, வரமுடியாது என்று குறுந்தகவல் அனுப்பினாள்.

தனியாளாக உணவகங்களின் சாப்பிடப்பிடிக்காமல், ஏற்கனவே சக பணியாளர் ஒருவர் சொன்ன விவரம் ஒன்று ஞாபகத்திற்கு வரவே, கிளினிக் அருகில் இருந்த பாபா செண்டருக்கு மதிய உணவு எடுப்பதற்குச்சென்றேன்.

அங்கே அற்புதமான சைவ உணவு கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு இருப்பதைக் கொடுத்துவிட்டு வரலாம் அல்லது கொடுக்காமலும் வரலாம் என்பது அங்குள்ள நியதி, அவரவர் விருப்பமும் கூட...

செண்டருக்குள் நுழைந்தேன். அழகழகான பெரிய பாபா சிலைகள். பாபா புத்தக நூல் நிலையம் என மிகவும் தூய்மையாக அழகாக இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தேன்.. சோறு போடுவதற்கான அறிகுறிகளே இல்லை.

பாபா பக்தர்கள் விளக்கு போட்டு, தியானத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மிகத்தூய்மையான குளுகுளு வசதி கொண்ட பிரமாண்ட அறை அது.

எங்கே சாப்பாடு போடுவார்கள்? என்று கேட்க கூச்சமாக இருந்தது. கேட்கவில்லை

ஒரு ஓரமாக, மிக நீண்ட மேஜை ஒன்றினில், லட்டு, ஜிலேபி, பால்கோவா என அடுக்கிவைத்திருந்தார்கள். அங்கே சென்று இரண்டு லட்டுகள் எடுத்து ஒரு தட்டில் வைத்து, அங்கே பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தவரை அழைத்து, ஐந்து ரிங்கிட் கொடுத்தேன்.

ஒரு வெள்ளியை எடுத்துக்கொண்டு மீத நான்கு ரிங்கிட்’ஐ என்னிடமே திருப்பிக்கொடுத்தார்.வேண்டாம் என்றேன்.
இந்த லட்டுகள் யாருக்கு? என்றார்.
எனக்குத்தான், நான் சாப்பிடப்போகிறேன் (பசி), என்றேன்.
உடனே அவர், ஒரு குட்டி தட்டினை எடுத்து, அதில் இன்னும் சில பலகாரங்களை வைத்து என்னிடம் நீட்டினார்.
எதுக்கு? கேட்டேன். அவர் என்னையே உற்று நோக்கிவிட்டு, இதற்கு முன் நீங்கள் இங்கே வந்ததில்லையா ? என்று கேட்டார். ஹூஹும் வந்ததில்லை, என்றேன். சரி வாங்க, என்று என்னை பாபாவின் பெரிய சிலைக்கு முன் அழைத்துச்சென்று, அவர் பாதத்தின் கீழ் நான் வாங்கிய லட்டு பலகாரங்களை என் கைகளாலேயே வைத்து வணங்கச்சொல்லி, பாபாவில் மேல் இருந்த ஒரு பெரிய மாலையினை எடுத்து அவரின் பாதத்தில் வைத்து, பிரார்த்தனை செய்து, அதை என்னிடம் வழங்கி, இனி உங்களின் வாழ்வில் நடப்பதனைத்தும் சிறப்பானவையே. இனி நீங்கள் அடிக்கடி இங்கு வருவீர்கள். பாபா உங்களை அழைத்துவருவார் என்று சொல்லி, சீரடி பாபாவின் சீடி ஒன்றினையும் எனக்கு வழங்கினார்.

நிஜமாலுமே ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன். அங்கே இருக்கின்ற அத்தனை பேரில், புதிதாக வந்த எனக்கு மட்டும் அவ்வளவு பெரிய மாலை ஒன்று கிடைத்திருப்பது மகிழ்வைத்தந்தது.

சீடி என்ன விலை? கேட்டேன்

நீங்கள் முதலில் அதைப் பாருங்கள். உங்களுக்கு இஷடமென்றால் பணம் கொடுங்கள் இல்லையேல், பரவாயில்லை. என்றார்.
கொஞ்ச நேர மௌன நோட்டத்திற்குப்பிறகு அலுவலகம் வந்துசேர்ந்தேன். வந்தவுடன், என் சக ஊழியரை அழைத்து, பாபா செண்டரில் மூன்றுவேளை உணவு கிடைக்கும் என்றாய். அப்படி ஒன்று தெரியவில்லையே..!

அதற்கு அவள், கீழே தியான பஜன் மடம். மேலேதான் உணவு வழங்குவார்கள். நீங்கள் முதல் மாடிக்குச் செல்லவில்லையா? அங்கே யாரிடமாவது கேட்டிருக்கலாமே.. யக்கா.. என்றாள்.

ஓ.. ஒகே ஒகே.

வியாழன், நவம்பர் 21, 2013

section 376A for incest


A 46-year old foodstall operator has been remanded for having sex with daughter over the past three years. The 21-year old daughter, however, says she is a willing partner as she is in LOVE WITH HER FATHER .

இப்படி ஒரு தலைப்புச் செய்தியுடன் வந்த பத்திரிகை ஒன்றினைப் படித்துவிட்டு அலுவலகத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானோம்.

மூவினம் வாழும் நாட்டினிலேயே, இப்படிப்பட்ட incest  உறவுகளைச் சொல்லும் செய்திகள் பிரசுரமாகுகின்ற போது, எங்களுக்குள் எழுகின்ற முதல் கேள்வி.. `யார், எந்த இனத்தில்? என்பதுதான்.

இன்றைய இந்தச் செய்தியால், அனைவரும் ஒன்று சேர வினவிய முதல் கேள்வியும் இதுதான். யார்? எந்த இனம்? காரணம், `எந்த இனம் என்று தெரிந்துகொண்டால், `அப்பாடா, எங்க இனத்தில் இப்படியெல்லாம் நடக்காது, நாங்கள் மதத்தால் கட்டமைக்கப்பட்ட சீரிய ஒழுக்கத்துடன் வாழ்கிறோம்.., `இந்த இனமே இப்படித்தான்..’ என்கிற முத்திரையினை குத்திவிட்டு, சம்பந்தப்பட்ட இனத்தவர் அவ்வேளையில் அங்கே இருந்தால், அவரையும் கொஞ்சம் சீண்டிவிட்டுச்செல்வதுதான் இங்கே வழக்கம். இது எதிர்ப்பாராமல் நிகழ்வதுபோல் இருந்தாலும், திட்டமிட்டு ஒருவரை ஒருவர் ரணமாக்குகின்ற சாதுர்யம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும் பொதுவில் மூவினம் கைக்கோர்த்து ஒன்றாக ஒற்றுமையாக வாழ்கிறோம் என்று `சும்மாகட்டியும்சொல்லிக்கொள்வோம்.

நல்லவேளை, யார் எவர் என்று சொல்லாமல், பெயர்களையும் குறிப்பிடாமல், பத்திரிகை தமது செய்தியினை மட்டும் பிரசுரமாக்கியிருந்தது.

செய்தி இதுதான்...

SPM வரை படித்த இருபத்தொன்று வயது பெண் தனது அப்பாவையே காதலித்து அவருடன் கடந்த மூன்று வருடங்களாக உடலின்ப சுகம் அனுபவித்து வந்திருக்கின்றாள். ஒவ்வொரு முறையும் அவளை உடலின்ப சுகத்திற்கு பயன்படுத்தியப்பிறகு அத்தந்தை அவளுக்கு பணத்தைத் தாரளமாக வாரி இரைத்துள்ளார் என்றும் அச்செய்தி சொல்லியிருக்கின்றது.

சரி, எப்படி இவர்கள் பிடிப்பட்டார்கள்.?

பள்ளிப்பருவம் முடிந்தபிறகு தனது மாமாவில் சலூனின் அவரின் பாதுகாப்பில் அங்கேயே வேலை செய்துவந்திருக்கின்றாள் அப்பெண். ஒருநாள், மாமாவின் கைப்பேசி `பேட்டரி’ தீர்ந்துபோகவே, அப்பெண்ணின் கைப்பேசியை இரவல் வாங்கி பயன்படுத்துகிறபோது, அவ்வேளையில் அவளுக்கு வந்திருந்த குறுந்தகவல் ஒன்றினைப் படிக்கநேர்ந்து குழப்பம் கொண்டு, மேலும் அவளின் கைப்பேசியை முழுமையாக ஆராய்ந்து அங்கே அவளுக்கு வந்திருந்த குறுந்தகவல் அனைத்தையும் வாசித்து அருவருப்பாகி அப்பெண்ணின் தாயிடம் அக்கைப்பேசியை ஒப்படைத்துள்ளார்.

அப்பா மகளின் காதல் காம குறுந்தகவல்களைப் படித்து இதயம் இரண்டாய் பிளந்தநிலையில் சிலையாய் இருந்த தாயை அழைத்துச் சென்று போலிஸில் புகார் கொடுத்துள்ளார் மாமா.

தந்தையை காவல்துறை பிடித்துச்சென்றிருப்பினும், மகளை ஏன் தண்டிக்கவில்லை என்கிற கேள்வியும் இல்லாமல் இல்லை. தான் இஷ்டப்பட்டு தன் தந்தையை காதலித்து, நடைபெற்ற அனைத்து காமலீலைகளுக்கு தாமும் பொறுப்பு என்று அம்மகள் ஒத்துக்கொண்டாலும், சட்டம் இதுபோன்ற உறவுமுறைகளை ஆதரித்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒருபோதும் அனுமதிக்காது என்று முடிவாக சொல்லிவிட்டது.

அநேகமாக இருவருக்கும் செக்‌ஷன் 376A குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படும் என்றும் அச்செய்தியில் சொல்லப்படுகிறது. குற்றம் நிரூபிக்கபட்டால் இருவருக்கும் தலா இருபது ஆண்டுகள் சிறைவாசம் உறுதி.

Thank you The Star.     
      

செவ்வாய், நவம்பர் 12, 2013

ஒலிக்காத இசை

நாய்கள் சொல்லும் 
அதன் பாஷையில்
மனிதன், 
குரைத்துக்கொண்டிருக்கிறான்..

%%%%%%

காற்று அப்படியே நிற்கிறது
உடலுக்குள் உஷ்ணம் தான் 
அசைகிறது..

%%%%%%%

எனக்குள் இயங்குகின்ற 
இசை..
எங்கும் ஒலித்ததில்லை
இதுவரை..

%%%%%%%

Pose கொடுக்காதபோது
click செய்யப்பட்ட புகைப்படத்தில் 
நானும் பேரழகியே... குழந்தைபோல்.!

%%%%%%%