ஞாயிறு, ஜனவரி 08, 2012

பயம் வந்தால் எல்லாமே

காருக்குள் நான்
முன்னே ஒரு பெரிய கால்வாய்
இரு பக்கமும் வாகனம்
என் கார் முன்னே நகர்கிறது
காரின் ‘ப்ரேக்’கை அழுத்தமாக மிதிக்கின்றேன்
கை ப்ரேக்’கை இறுக்கமாக பிடித்து 
பலம் கொண்டு இழுக்கின்றேன்
கார் முன்னோக்கியே...
விழுவேன் நிச்சயம் கால்வாயில்
கண்களை இருக்கமாக மூடினேன்
என்ன சோதனை இது
மயக்கமே வந்தது..
ஒன்றுமே நிகழவில்லை
இரு பக்க வாகனமும் நகரும் போது
வந்த மனப்பிரம்மை..

படித்ததில் பிடித்தது

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பரை சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்

ஆத்மாநாம்.

ஆராய்ந்து

பழி வந்ததா
இழிவு வந்ததா
ஆராய்ந்து ஆராய்ந்து
குறைத்து விடாதே
மன நிம்மதியை

தகுதி

சின்னச் சின்ன
சீண்டல்களையும்
ஆராய்ந்துக்கொண்டிருக்கிறேன்
என்னோடு உனக்கென்ன 
வெட்டி வேலை ?