வியாழன், ஜனவரி 31, 2013

அடி போடி


`ஏம்மா, அவ கிட்ட ஏன் கண்டதையெல்லாம் பேசறீங்க.. அவ அப்படியே சொல்றாதானே..!’

`அய்யோ அம்மா, நான் ஒண்ணுமே சொல்லல, வந்தது வராததுமா எப்படி கோள் மூட்டறா பாரு..’

`அவ கோள் மூட்டல, நீங்க பேசியதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு ஒப்பிக்கறா..!’

`யம்மா..யம்மா.. அவ சொல்றத கேளு, என்னை நம்பாதே..இல்லெ.’

`சாதாரணமா பேசினா சிரித்துக்கொண்டு சும்மா இருக்கலாம்.. கெட்டவார்த்தையெல்லாம் பேசறா.. யார் வாத்தியாரு.. இங்கே?’

`அய்ய்யோ..அவுவு (வாயில் அடித்துக்கொண்டு).. கெட்டவார்த்தையெல்லாம் யார்’ம்மா பேசுவா? நீ ஏம்மா என்னிய நம்ப மாட்டேங்கிற..!’

`அப்போ கெட்ட வார்த்த யார் பேசறா அவ கிட்ட இங்கே.. இன்னிக்கு ஒரு வார்த்தை சொன்னா.. தெரியுமா?’

`நீ நல்லா எடங்கொடு, அவ என்னிய ஏய்க்கிறா.. மரியாதை கொடுக்கமாட்டேங்கிறா..அதான் திட்டினேன்..’

`அதுக்குன்னு கெட்ட வார்த்தையா?..’

`அது என்ன கெட்ட வார்த்தையா?’

`...... இது கெட்ட வார்த்தை இல்லையா?’

`அது நான் சொல்லல..’

`பின்னே..?’

`டீவி’ல சீரியல் பார்க்கறா என் கூட, அதில் வந்த வார்த்தையா இருக்கும்.. அத சொல்லுவா.. அத போய் பெரிசு படித்திக்கிட்டு.. போம்ம்மா..’

`ஓ.. டீவி’ல சென்சார் இல்லாம இந்த வார்த்தைகளெல்லாம் பேசறாங்களா..!!? நான் சீரியல் பார்ப்பதில்லை.. இருங்க, பேப்பருக்கு எழுதி.. வாரு வாருன்னு வாரறேன்.. இப்படியா நாடக வசனங்களை சென்சர் இல்லாமல் ஒளியேத்தறாங்க..’

மாமி மௌனமாக என்னை நோக்கி ஒரு அலட்சியப்பார்வையை வீசினார்.. அதில், அவளிடம் பயன்படுத்திய அதே வார்த்தையோடு.. `அடி போடி......, பெரிய இவ இவ..’ என்கிற மையிண்ட் வாயிஸ் கேட்டது..

அவ்வளவு சத்தமாவா கேட்குது..!!!