வெள்ளி, பிப்ரவரி 15, 2013

கஞ்சி (மாமி கதை)

`கஞ்சியே கொடுக்கறீங்களே.. நான் என்னாவேனோ, முருகா.! என்னால் கஞ்சி சாப்பிடமுடியவில்லை.’
வேலை முடிந்து வந்தவுடன் புகார்.

`உங்களுக்கு அதுதானே நல்லது. அரிசி சோறு இறைச்சி மீன் உங்களால் விழுங்க முடியவில்லை... கஞ்சியில் எல்லாமும் போட்டுத்தான் சமைக்கிறேன். மேலும் இருதயம் வீக்’ஆ இருக்கு..எண்ணெயில் பொரித்த சாப்பாடுகள் சரிப்பட்டுவராது. கவிச்சி சாப்பிடுவதால் உடமெல்லாம் அரிப்பு, இரவெல்லாம் தூங்காமல் அவதி படறீங்க...
மசால கொடுத்தால், வயிறு வலி.. அன்னிக்கு வந்ததுதானே வலி..!!?’

`எனக்கு அதெல்லாம் வராது..., எனக்கு ஒரு வியாதியும் இல்லே.. அள்ளிவிடாதே..’

`ஆமாமாம்..அள்ளிவிடறேன். சைவம் செய்தால் தொடமாட்டேன் என்கிறீர்கள்.. தயிர் சாதம் செய்தேன் தொடவேயில்லை... சாம்பார் சாதம் சாப்பிடும்போது, வாந்தி வருவதைப்போல் செய்தீர்களாம்..அவ சொன்னா.!!

`ம்ம் அவ சொல்லுவா.. எனக்கு சீனக்குத்தியோவ் வேணும்..’

`முடியாது.. அதில் ப்ளாச்சான் போடுவானுங்க.நல்லா இருக்கிற உடம்பு மீண்டும் அரிக்கும்.. தூங்காம அவதிப்படுவீங்க...’

`எனக்கு ஒண்ணும் வேணாம். பட்னியா படுத்துக்கறேன்..’

`கஞ்சிய முடுல்ங்கு முடுல்ங்கு பாட்டி.. ’ என்கிற குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது... வேலைக்காரி சாப்பாடு கொடுக்கிறாள் போலும்...
அவள் வேறு தமிழ் கற்றுக்கொண்டு வருகிறாள்...

என்ன செய்யலாம்???? மிடியல.....