வியாழன், அக்டோபர் 18, 2012

தொட்டில் பழக்கம்

குழந்தைப்பருவத்தில்
கதைப்புத்தகங்களில்
ஓவியங்களையும் புகைப்படங்களையும்
கண்குளிர கண்டுகளித்த பின்
கதைகளில் நுழைகின்ற நிலை
இன்னமும் தொடர்கிறது
தொட்டில் பழக்கமாக..

மிகவும் பிடித்த ப்ளாக்

எழுத்தாளர் சாருவின் அறிமுகத்தால் பல தமிழ் எழுத்தாளர்களைக் கண்டு கொண்டேன். அவ்வரிசையில் புதிதாக அறிமுகமானவர் கவிஞர் கலாப்பிரியா

இன்று காலையிலேயே கலப்பிரியா அவர்களின் ப்ளாக்’ஐ வலம் வந்துக்கொண்டிருந்தேன். அவரைப்பற்றிய தேடலில், அவர் follow பண்ணும் ப்ளாக்’குகளைக் கண்ணுற்றேன். அங்கே என்னை அதிகம் கவர்ந்த ஒரு வித்தியாசமான வலைப்பூவைப் கண்டவுடன் மனம் குதூகலித்தது.

அற்புதமான இனிய கானங்களின் இசைத்தொகுப்புகள் அடங்கிய ப்ளாக் அது. ஞானவெட்டியான் திண்டுக்கல் அவர்கள் தேர்ந்தெடுத்த செவிக்கினிய பாடல்கள்

இதுபோனறதொரு தொகுப்பைத்தான் நான் பலநாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன். அதைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் உடனே பாடல்களைக் கேட்கத்துவங்கிவிட்டேன். 

என்ன இனிமையான பாடல்கள் அனைத்தும். நாமே முயன்று தேடினாலும் கிடைக்காது இதுபோன்றதொரு இசைக் கலவை. முதல் பாடலே என்னைத்தாலாட்டிச்சென்றது..

பாடல்களுக்கு இசையமைப்பதில் அறுபது எழுபதாம் ஆண்டு சினிமா இசைமேதைகள் முத்திரை பதித்ததுவிட்டுச்சென்றுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கலாகாது. நான் இந்த பூமியில் பிறக்காத காலகட்டமாக அவைகள் இருப்பினும், அக்காலக்கட்ட பாடல்களே என்னை அதிகமாக ஆக்கிரமிக்கின்றன.

எங்களின் காலகட்டமான எண்பதாம் ஆண்டுப்பாடல்களில் ஒரு வித சோர்வு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், பலமுறை கேட்ட பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒலியேற்றி சலிப்பை ஏற்படுத்தி விட்டனர் வானொலி நிலையத்தினர்.

அறுபதாம் எழுபதாம் ஆண்டுப்பாடல்களை முற்றாக புறக்கணித்த நிலையில் இன்றைய வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன (மலேசிய சூழலில்). அப்படித்தேன்றும் ரசிகர்களுக்கு இந்த ப்ளாக் புத்துணர்வைக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

கேட்டுப்பாருங்கள் நீங்களும் மயங்கிவிடுவீர்கள். முதல் பாடலே...

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்...



செவிக்கினிய பாடல்கள்