சனி, நவம்பர் 19, 2011

அறிவியல்

வேதியியல்


அறிவின் ஊற்று
ஆராய்ச்சியின் முடிவு

சோதனைக்கு பலியாகும்
சோதா ’பொந்து’ எலிகள் தாம்,
அறிவியலாளர்களின் பரிசு

வலையில் சிக்கவைக்க
எத்தனையோ சிந்தனைச் சிற்பங்கள்..
எல்லாம் ‘ருசிகண்ட பூனை’ அனுபவங்கள்
அறிவியல் வியூகங்கள்..!

’கண்ணே, முத்தே, மணியே..
ஓடி வா..
உன் வர்ண விதை வேண்டுகிறேன்..
வறண்டுக்கொண்டிருக்கும் 
என் கவிதை ஊற்று உயிர் பெற..!’

பொரியில் (பொறியியல்)வைக்கப்படும் 
வேதியியல் பாஷாணம் தான்..
இந்தக் கொஞ்சலும்
கெஞ்சலும்....

பிடிப்பட்ட எலிகளுக்கு
மின்சார அறுவைச்சிகிச்சை..

வேதியலில் (வேதனையில்)
வெளியேறும்...
’விந்து’ வே....
ஆதாரத்தின் முடிவு.!?

பெண்ணான குழந்தை

எல்லா நாளும் 

சிறப்புப்பெறுவது 

எங்களால் தான்..

சராசரி நினைவுகள்:



நோவும் போது
என் மருத்துவரையும்

காதலென்றால்
என் உயிரே..உன்னையும்

காமமென்றால்
என் குருவையும்

அன்பு என்றால்
என் அப்பாவையும்..

துன்பமென்றால்
என் இறைவனையும்

மகிழ்ச்சியின் போது
கண்ணாடியையும்....

நினைப்பேன்..................
சராசரியாக!!!

குழப்பம்

அவர் இவரல்ல,
இவர் அவரல்ல,
தெளிவான ஆதாரத்தோடு

அவர் வேறு
இவர் வேறு
அதே, ஆதாரத்தோடு

இருவரும் 
ஒருவரா!!
மனம் ஆர்ப்பரிக்கிறது...

அந்த ஒருவர் 
யார்?
முகமுடி அவதாரமா..!?

அவர் இவராகவும் 
இருக்கலாம்.!
இவர் அவராகவும் 
இருக்கலாம்.!

இதில் ’......... ’
என்பவர், யார்??
என்பதுவே என் குழப்பம்!

முரண்

கலர் கலர் 
நிறங்களில்
வர்ணம்

’வயாக்ரா’



வழுக்கைத்தலையில்
வர்ண விக்..

சொத்தைப்பற்களுக்கிடையே
ஒரு தங்கப்பல்..

வெள்ளைத்தாடியில்
கருப்பு டைய்..

கிட்டே வந்தால்
அரபு அத்தர் வாடை..

பெண்கள் பூசும் 
பிங்க் பௌடர், முகத்தில்..

பாதிவரை பட்டன் திறந்த 
பளப்பளக்கும் சொக்கா..

கழுத்தில் தொங்கும்
கலர்போன வெள்ளிச் சரடு..

வரைந்த அரும்பு மீசை
வராத குறும்புப்பார்வை..

இவர் ’வயாக்ரா’
எடுப்பவரோ..?

எனக்கு மனபிராந்தியோ!!?

உனக்காகவே

எல்லாம் உனக்காக

முகர்ந்துப் பார்த்தது
மோதிப்பார்த்தது
சீண்டிப்பார்த்தது
சீறியும் பார்த்தது
கத்திப்பார்த்தது..

இரண்டு மூன்று முறையல்ல
பல முறை சுற்றி
வலம் வந்தும் 
செய்வதறியாது
அமைதியாக திரும்பிச் சென்றது
பூனை...

அசைபவரிடம் 
ஆசை கொள்வது தான் 
உயிர்களின் இயல்பு(போ)!?

சிலவேளையில்
உன் முன்னே, நான்
அசைந்த்துக் கொண்டே... 
செத்த எலியாக...

உன் அமைதியான
சீண்டல் வேண்டி....!!!

வலிகளில் உதிக்கின்ற
சில கிறுக்கல்களுக்காக

அதுவும் உனக்காக....!

ஷவர்(shower)



பூமி பொழியும்
சாரல் சுடு மழையில்
தினமும் நான்..

உடல் வளர்த்தேன்

திரந்த வெளி
கருப்புப் புகையைக் கக்கும் கார்கள்

கடுமையான வெயிலின் 
வறண்ட சாலையில்
புழுதி பறக்கும் சூழல்

குடையின் கீழ்
ஒரு ’நாசி லேமக்’ வியாபாரி
ஈ ஓட்ட ஒருவர்
’புங்கூஸ்’ செய்ய ஒருவர்..
பணம் வாங்க ஒருவர்

நான், நீ என 
முட்டி மோதி நிற்கும் கூட்டம்

அந்த உணவுக்கு
கிராக்கி இங்கே..
சுவை அதிகமாம்...!!

தோழி, எனக்கும் ஒரு புங்கூஸ்
வாங்கிவந்தாள்..

என்னை உண்
என, 
என்னிடம் கெஞ்சிக்கொண்டிருக்கு
அந்த ஒரு ’புங்கூஸ் நாசிலேமக்’

துளிதான் பெரிசு

எனது பார்வையில்

அதிக அன்பில் 
மறைந்திருக்கும், உனது 
கொஞ்சம் அலட்சியம்..

எவ்வளவு அவசியம்
என்பதில் மறைந்திருக்கும், உனது
கொஞ்சம் அவசியமின்மை..

எவ்வளவு இஷ்டம்
என்பதில் ஒளிந்திருக்கும், உனது
கொஞ்சம் வெறுப்பு

எவ்வளவு தேவை 
என்பதிலும்..
சதா தொற்றிக்கொண்டிருக்கும்
உனது தேவையின்மை..

அதிக அக்கறையில்
அப்போ அப்போ தலை காட்டும்
உனது கொஞ்சம்
புறக்கணிப்பு...

எவ்வளவு தான் அதிகமாக
’அது’ இருந்தாலும்
அந்த ’கொஞ்சம்’ தானே
எனக்கு பெரிதாக
தென்படுகிறது.

with love
sriviji

Learn from mistakes :-


கல்யாணம் பண்ணியதிலிருந்து... 
சமைக்கத்தெரியல, 
சமைச்சா.. உப்பில்லை, 
காரமில்லை, 
புளி போதவில்லை, 
சரியாக வேகவில்லை, 
சக்கரை இல்லை, 
காப்பி டீ கூட கலக்கத்தெரியவில்லை... 
உம் பொண்டாட்டிக்கு!!! 

இப்படியே.....! 
தவறு செய்து 
தவறு செய்து, 
பல ஆண்டு அனுபவதிலிருந்து கற்றுக்கொண்டு..
இப்போது சூப்பரா சமையல் வரும்போது, 
உப்ப குறைங்க, 
காரம் எடுக்காதிங்க, 
புளிப்பைத்தவிர்த்து விடுங்க, 
அரைவேக்காடு காய்கறி சாப்பிடுங்க, 
சைவம் எடுங்க, 
சக்கரையை குறைத்துக்கொள்ளுங்க, 
காப்பி டீ தவிர்த்து விடுங்க...!

இது தான் வாழ்க்கை. 

புது மனைவிக்குச் சமைக்கத்தெரிய வில்லை யென்றால்.. திட்டாதிங்க, அவள் ஆரோக்கிய சமையல் செய்கிறாள்...

சாட்சி



ஆட்கள் நடமாட்டமே இல்லாத 
மலர்கள் கூடையாக வளைந்திருக்கும் 
பூ மரப்பொந்துகளில்... 

நீர் சொட்டச் சொட்ட 
நனைந்த சருகுக் குவியலில்
ஒரு பாறை..!

அதன் மேல் நான்,
என் மடியில் நீ..
ஏக்கப்பார்வையுடன்....

நடக்குமா நடக்காதா!? 
மறைந்திருந்து காத்திருக்கும் 
ஒரு திருட்டு ரசிகன்!