செவ்வாய், மே 15, 2012

ஆஹா...

எல்லோரும் சொல்வதால்
நானும் சொல்லிச்சென்றேன்
சம்பிரதாய வாசகமொன்றை - ஆஹா.

%%%

கலகம்
கண்ணீர்
சிரிப்பு
சுபம்
முடிவுக்கு வந்தது
பெண் எழுதிய தொடர்கதை

%%%

தவணை முறையில்
வராதே
தவிப்புகள் கூட
காலாவதியாகின்றது

%%%

ஐ லவ் யூ
சொன்ன மறுவினாடி
காதலன் மன்மதனாகிறான்
காதலியின் பார்வையில்

%%%

சொல்லாத வார்த்தைக்கு
முற்றுப்புள்ளியாய்
ஒரு துளி கண்ணீர்

%%%

உஷ்ணம் தாங்காத மரம்
தலையசக்கின்றது
தென்றலாய்..

%%%

அடி வாங்கும்போது
`அண்ணா’ என்கிறான்
வலி பொறுக்காமல் அல்ல..
வீரனின் சொல்லுக்கு
பலியாகாமல் இருக்க...

%%%%


சின்ன மீன் தொட்டியில்
பெண் குழந்தை மீன்களை ரசிக்கின்றாள்
ஆண்குழந்தை தூண்டில் போடுகிறான்
வலை வீசுகின்றான்

%%%