செவ்வாய், பிப்ரவரி 19, 2013

வாழ்வா இது...?

மலாய் பத்திரிகையில் படித்த செய்தி...

பன்னிரண்டு வயதே நிரம்பிய ஒரு பெண் குழந்தை, தமது நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். 

விவரம் குடும்பதிற்குத்தெரியவே, காதலனுடன் ஓட்டம். காதலன், மற்ற நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து அவளை நாசம் செய்துவிட்டு, தொழிலுக்கு வாடிக்கையாளர்களை பார்த்துக்கொடுத்துள்ளார். 

நல்ல முறையில் தொழில் நடந்தேறியுள்ளது.. மாதம் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை வருமானம். 
உலகமுழுக்க வாடிக்கையாளர்கள் - ஜப்பான்,கொரியா, தைவான் என.. 

பதினைந்து வயதில் இரண்டு முறை கருக்கலைப்பு.

பதினாறு வயதில்.. கர்பப்பை புற்றுநோயோடு எச்.ஐ.வி’யும் கண்டுள்ளது.