வெள்ளி, ஜனவரி 20, 2012

ஒத்துப்போகிறது

எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒருவர்
எனக்காகவே எழுதிக் கொண்டிருக்கிறார்
சில கவிதைகளை
நான் யாரென்று தெரியாமலேயே..

எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒருவரின் எழுத்தை 
எனக்காகவே எழுதப்பட்டதாக
நினைத்து 
நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்

எங்கோ ஒரு மூலையில்
யாரோ ஒருவரின் பேனா
என் உணர்வுகளை
எழுதிக்கொண்டிருக்கிறது
என்னை யாரென்று தெரியாமலேயே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக