திங்கள், ஜூலை 11, 2011

தமிழிசை (ஆய்வுக் கட்டுரை)

தமிழர்கள் வரலாறு உருவாவதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் இக்கருத்தைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்தகுடி என்ற வழக்கு வலியுறுத்துகின்றது. இவ்வழக்கை வெறும் மேம்போக்காகக் கூறுவதை விடுத்து ஆய்வுக் கண்கொண்டு நோக்கின், கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பேயான தொல்லுலகில் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்பது மாத்திரமின்றி, அத்தொன்மைக் காலத்திலேயே இக்குடி மூத்து முதிச்சு நிலையினையும் அடைந்திருந்தது என்பதும், எல்லாத் துறைகளிலும் கலை கண்டிருந்தது என்பதுமான மாபெரும் உண்மை புலனாகும். தொடக்கக் காலத்தில் முதிர்ச்சியுள்ள வளர்ச்சி நிலையை எட்டியிருந்த தமிழர், தம் மொழியை இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூவகைப்படுத்தி வளர்த்து வந்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் பற்றியும், தமிழரின் வாழ்க்கை நிலை பற்றியும் அறிந்து கொள்வதற்குத் தமிழிலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன. தமிழர்கள் முத்தமிழோடு கலை மற்றும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கிய சிறப்பையும் இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன. எனவே இலக்கியங்களே தமிழர்தம் கலை மற்றும் கலாச்சாரம் பற்றி அறிய உதவும் முதற்சாதனங்களாக அமைகின்றன. ஆகவே இலக்கியம் குறிப்புகளின் அடிப்படையில் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ் மற்றும் நுண்கலைகள் என்னும் ஐந்தமிழுள் இசைத்தமிழ் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து, ஆய்ந்து அரிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது
முதற்கண் இயல் தமிழ் என்பது எது? இது பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகள் யாது என்பது பற்றி ஆராயப்படுகிறது. இயற்றமிழ் ஒரு விளக்கம்அனைத்துத் துறையிலும் இயலுகின்றதும், இயக்க வைப்பதுமாகிய இயற்றமிழ் என்பது தமிழர் யாவர் மட்டும் பொதுமையின் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும், செய்யுளுமாகிய நூல்களில் தொகுதியாம் என்பர். படித்த மாத்திரத்தில் ஒன்பான் சுவை தரத்தக்கதாக அமைந்துள்ள இயற்றமிழினுள்ளே எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து வகை இலக்கணமுமே அடங்கும், இன்னும் தெளிவாகக்க கூறினால், வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் எனப்படும் என்பர் பேராசிரியர். எனவே இயற்றமிழில் இலக்கணம், இலக்கியம், செய்யுள், உரைகள், உரைநடை, புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும் என்பது தெளிவு. முத்தமிழில் முன்னர் தோன்றியமையாலும், இயலின்றி ஏனை இசை மற்றும் நாடகத் தமிழ் இயங்கவியலாமையாலும் இவ்வியற்றமிழ் முத்தமிழ் முதன்மைபடுத்தி மொழியப்படுகின்றது. இயற்றமிழன் பின் வைத்து எண்ணப்படுகின்ற இசைத் தமிழ் பற்றியும் இசைத்தமிழ் எவ்வாறு கூத்து என்னும் நாடகத் தமிழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்குகிறது என்பது பற்றியும் அடுத்து ஆராயப்படுகின்றது.
இசைத்தமிழ் விளக்கம்: இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது. தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கணத்தோடு இசைத் தமிழிலக்கணமும் இழையோடிக் கிடக்கின்றது. இவ்விரு தமிழும் வெவ்வேறாகப் பிரித்தறிய முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.
இசை பொருள்: இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது எனும் பொருளைத் தருகிறது. இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்ற பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்பர்.
ஒலி, ஓசை, இசை:- இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பதும் ஒரு தத்துவம், மூலாதாரமான ஒலி வேறு ஓசை வேறு ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என இறையைப் பற்றிக் கூறும் அப்பரின் தேவார வரிகளிலருந்து ஓசை வேறாகவும், ஒலி வேறாகவும் கருதப்படுவதை உணர முடிகிறது. ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையை ஏழிசையாக அமைகிறது என்று சுட்டுகின்றது. எனவே ஓசையே இசைக்கு அடிப்படை என்பதை உணர முடிகிறது. ஒலி என்பது ஒரு குறிப்பைக் கருதி எழுந்து, இனிதாய் அமைந்து சுவைப் பயப்பதாக இருக்க வேண்டும். காலக் கடப்பால் ஏற்பட்டுள்ள சொல் பயன்பாட்டை நோக்கும்போது இசையும் ஒலியும் சில இடங்களில் வேறுபாடு கருதாது பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஓசை மற்றும், இனிதாய் அமைந்து சுவை பயப்பதாக இருப்பதான ஒலியின் அடிப்படையில தோன்றுவதான இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். இயல் தமிழைக் கற்றும், கேட்டும் அனுபவிக்கவும் சுவைக்கவும்க முடியும். ஆனால் இசையையோ செவிப்புலன் ஒன்றினால் மாத்திரமே சுவைக்க முடியும்.
இசையும் இறையும்:
இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.
துறைவாய் நுழைந்தனையோவற்றி
யேழிகசைச் சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொலாம்
புகுந்த தெய்தியோ
எனும் திருக்கோவையார் பாடல் ஏழிசைச் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பதைத் தெரிவிக்கின்றது. ’ஏழிசையாய் இசைப்பயனாய் என்று சுந்தரரும் எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று அப்பரும் கூறியுள்ளமையும் நோக்கத் தக்கது.
ஆதி மனிதனும் இசையும்:
மொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம் புரியாத மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்று. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்ச கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆரவாரமே தாளமாயிற்று. சிலை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போது எழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்திற்கு மூலமாயிற்று.
இசையின் பழமை தொல்காப்பியம்:
மனிதனின் உணர்ச்சிப் பெருக்கோடு ஒன்றி வளர்ந்த இசை பற்றி நமக்கு உணர்த்தும் முதல் நூலாக தமிழின் கருத்துக் கருவூலமான தொல்காப்பியத்தையே கொள்ளலாம்.
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிய இசையோடு சிவனிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்
எனும் தொல்காப்பியம் அடிகள் இசையில் பழமையை உணர்த்தும் தொல்காப்பியச் சொற்களின் ஓசையதிக்கு வண்ணம் என்று பெயரிட்டு," வண்ணந்தாமே நாலைந்தென்ப "என்று கூறுவதன் மூலம் அதனை இருபது வகைப்படுத்திக் கூறியுள்ளார். வண்ணங்கள் என்றால் சந்த வேறுபாடுகள்- இவ்விருபது வண்ணங்களையும் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கண்ணி முதலிய பாடல்களில் தெளிவாகக் காணலாம். எதுகை, மோனை, இயைபு, முதலிய தொடைகளின் இலக்கணம் இசைக் கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை, விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுபவனவாம். எதுகை, மோனை போன்ற தொடைகளில்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடலுக்குரிய யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் அழகாகவும் தெளிவாகவும்</SP






--
T.Venugopal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக