வியாழன், நவம்பர் 17, 2011

தீபாவளிப்படங்கள்

வேலாயுதமே அருமை

தீபாவளி திரைப்படங்களில், என்னை மிகவும் கவர்ந்தது விஜய்யின் வேலாயுதம்’ . நன்றாகச் சிரித்தேன். இரண்டு இரண்டரை மணி நேரம் திரையரங்கே கலைக்கட்டியிருந்த்தது. சினிமாவில் லாஜிக் எல்லாம் பார்க்கவேண்டாம், உலகத்தரம் என்கிற முத்திரையோடு வரும், எந்த ஆங்கிலப்பட்த்தில் லாஜிக் இருக்கு?? பார்த்துவிட்டு ஆஹா ஓஹோ என்கிறோமே.! நம் ஆறாம் அறிவிற்கே எட்டாத விஷயங்களில் உள்ள அனைத்து விவரங்களையும் ஒரு படத்தில் நுழைத்து, அதைப் பார்ப்பவர்களை வாய் பிளக்க வைத்து, உலக அளவில் வசுலில் சாதனை படைத்தும் வருகிறார்களே எப்படி? லாஜிக்கோடு இருப்பதாலா!? நமக்கு அதில் ஒரு மட்டையும் புரியாது, ஆனால் நாமும் ஒப்பிற்கு அதை ஆஹா.. உலக தரம், ஜேம்சு போண்டு கலக்கிட்டான் அப்படி இப்படியென பிறரோடு சேர்ந்துக்கொண்டு, நமது அறிவின்மையை காடிக்கொள்ளாமல் ஜால்ரா போட்டுக்கொண்டிருப்போம். அதுவே தமிழ்படமென்றால், சரமாரியாக வசைபொழிகிறோம்.    

கொஞ்ச நேரம் ஜாலியாக பொழுதைகழிக்க திரைப்படங்களுக்குச்செல்கிறோம், அங்கும் (இங்குள்ள சில பேனா தமிழ் புலிகள் போல்) தமிழைகளின் புளித்துபோன வரலாறு, மஞ்சள் மகிமை துளசி மகிமை, சாணி மகிமை என ஆத்து ஆத்து என ஆத்தினால், ரசிகன் பொலிவில்லாமல் திரையரங்கை விட்டு வெளியேறுவதைத்தவிர வேறு என்ன நடக்கும். ஒரு குழந்தையைக்கவராத திரைப்படம் வெற்றிப்பெறுமா என்ன? நாம் எல்லோரும் மனதளவில் குழந்தைகள்தான். மனதைக்கவராத திரைப்படம் எப்படி எடுபடும்?

அதற்காக, கதாநாயகன் சர்கஸ் கலையைக் கற்று வந்து கம்பு, பந்து, கட்டை எல்லாம் சுற்றி, யானை, புலி, சிங்கத்தையெல்லாம் மெய்த்து விட்டால், மனதில் உள்ள குழந்தை மகிழ்ந்து விடுமா என்ன? நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் படத்திலிருந்து பார்த்து வருகிறோம், இன்னுமா??  

நாம் நமது பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்க எவ்வளவோ விவரங்கள் நம் காலடியில் கொட்டிக்கிடக்கையில், எழாம் அறிவை பார்த்து புலங்காகிதம் கொள்பவர்கள் எந்த ரக தமிழர்களாக இருக்கமுடியுமென்று தெரியவில்லை.! ஒரு சிலர் தைரியமாக தமது விமர்சனத்தை வெளிப்படுத்த இயலாமல், இந்த வருடம் வந்த இரண்டு தீபாவளிப்படங்களும் ’(அ)சுத்தமான/சுத்த குப்பைகள் என முடிவு செய்துவிடுகின்றனர். மனசாட்சி என்ன சொல்கிறதென்பதை ஆராயுங்கள், அடுத்தவர்களின் கருத்திற்குச் செவிசாய்ப்பதேன்? அதுவும் சொல்கிறவர் கொஞ்சம் இலக்கிய அறிவு, கொஞ்சம் தமிழ் பற்று, கொஞ்சம் உலக ஞானமுள்ளவராக இருந்து விட்டால் போதுமே..எல்லோரும் அவரின் வால் பிடித்து, அதுவே சரி என்பதைப்போல் முழங்க ஆரம்பித்து விடுவார்கள்.! எல்லோரும் சொல்கிறார்கள் என ஏழாம் அறிவை புகழ்ந்துத் தள்ளுபவர்களைப்பார்க்கும் போது எங்கே போய் முட்டிக்கொள்கிறதென்று தெரியவில்லை. படம் பதினைந்தே நிமிடங்கள் தான் அருமை. மற்றவையெல்லாம் நார்மல் மசாலாதான். சூரியா நடிப்பு பிடிக்கும் அதற்காக படம் பிடிக்குமென்று சொல்ல மாட்டேன். சுயமாக சிந்திப்போமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக