திங்கள், டிசம்பர் 19, 2011

எங்க ஊர் பத்திரிக்கைசெய்தி

ஒரு 16 வயதுடைய மாணவி, மாடியிலிருந்து தற்கொலை செய்துகொள்ள முயலும் போது, அவரது ஆசிரியரால் காப்பாற்றப்பட்டார். காரணம் காதல் தோல்வி. காதலன் வேண்டாம் என்றவுடன் இப்படி ஒரு முடிவைத்தேடி பல முறை முயற்சித்துள்ளார் அந்த மாணவி.

ஆசிரியரிடம் விசாரித்த போது, அவள் அடிக்கடி இந்த முடிவைத்தேடித் தான் பயணிக்கிறாள். ஏற்கனவே ஒரு முறை இப்படி ஒரு விபரீத முயற்சியிலிருந்து நாங்கள் அவளைக் காப்பாற்றியுள்ளோம். ஒருமுறை தமது தலையால் கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு பலமாக அடித்து ரணமாக்கிக்கொண்டாள். பிறகு ஒரு முறை சவர்க்கார நீரைப் பருகி உயிரை மாய்த்துக்கொள்ளவும் முயற்சித்துள்ளாள்.

காதலனைக் கேட்ட போது, அவள் தனக்கு பலவிதமான நெறுக்குதல்களைக் கொடுப்பதாகவும், தன்னை இறுக்கிப்பிடிக்க நினைப்பதன் காரணமாகவும், அவளை விட்டு விலக நினைக்கிறேன் என்கிறான்.

தாயிடம் கேட்ட போது, அவள் ஏற்கனவே தமது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு சாக முயன்றுள்ளாள், நான் காப்பாற்றிவிட்டேன் என்கிறார்.

நானே விவாகரத்து செய்துக்கொண்டு தனிமையில் வாழும் ஒரு தாய், நான் எப்படி இவளைச் சமாளிப்பேன் என புலம்புகிறாளாம் தாய்.

பாவம் அந்த மகள்...!!


2 கருத்துகள்:

  1. இதுபோல் தான் எனது மாமா மருமகள் நேற்று தற்கொலை செய்து கொண்டாள் மிகவும் வருந்தத்தக்க விஷயம்

    பதிலளிநீக்கு