வியாழன், டிசம்பர் 29, 2011

கருணை காட்டு

மக்கள் ஓசையில் வந்தது.. 2007

ஏய்
விவஸ்தைகெட்ட
வெயிலே..

என் கண் முன் வந்து நிற்காதே
உன் வருகைக்காகக் காத்திருக்கும்
மென்மையான மலர் அல்ல
நான்.!

காலையில்
கண்ணெதிரே தோன்றி
சாலையை இருளடையச் செய்து
என்னை அலைக்கழிக்க வைப்பதில்
உனக்கென்ன அப்பேர்பட்ட மகிழ்ச்சி!?

தங்கப்பல்லைக் காட்டி
இளித்து நிற்கும் உன்
பிரகாசத்தை
அவசர யுகத்தில்
அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் ரசிக்க முடியவில்லை..

ஒரு நொடி அசந்திருப்பின்
உன் ஒளிக் கதிர் தாக்குதலால்
ஓர் உயிரைக் கொன்று
எம பாதகியாயிருப்பேனே!

பழி பாவத்திற்கு அஞ்சி
கெஞ்சிக்கேட்கும்
எனக்குக் கருணைக் காட்டு..

கொஞ்ச நேரம் மேகத்திற்குள்
ஒளிந்துக்கொண்டு
வழிவிடு சூரிய பகவானே
நான் வேலைக்குப் போகணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக