வியாழன், ஜனவரி 26, 2012

மன வெ(வ)டிப்பு

கோடுகள்
நெளிந்து நெளிந்து
வட்டமாகி வடிவமாகி
அழகான
ஓவியமானது

அதைப்பார்க்கப் பார்க்க
பொங்கினான்
பதற்றமானான்
பரிதவித்தான்
பார்வையாளன்

அது வெறும்
ஓவியம் தான்
ஏன் கண்ணாடி போல்
என் பிம்பம் காட்டுகிறது!?

ஓவியனும்
திகைத்தான்
அது தன் உருவத்தை
இன்னும் கம்பீரமாக
காட்டிக்கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக