புதன், ஜனவரி 25, 2012

சுமைகள்

எங்களின் கம்பனியில் கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்துகிறார்கள். பங்கு பெறும் அனைவருக்கும் பரிசு உண்டு. நற்சான்றிதழ்களும் கொடுக்கப்படும். முதல் மூன்று பரிசுகள் அற்புதமானவை. 

மூன்று தலைப்புகள், 

1. கம்பனியில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனைகள் அதிகரிக்க, தனி நபர் ஊழியரான உனது பங்கு என்ன?

2. வருங்காலங்களில் கம்பனியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர நீ எடுக்கவிருக்கும் முயற்சிகள் யாவை?

3. சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகுள்ளாகமல் பாதுகாக்க, நீ ஒரு புதிய பொருளைக் கண்டுபிடிக்கவேண்டும். அது என்ன பொருள்? எப்படி கண்டுபிடித்தாய்? ஏன்? என்பனவற்றை தெளிவான விளக்கத்துடன் விவரிக்கவேண்டும்.

விதிமுறைகள்:

ஒருவர் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
கட்டுரை எத்தனை பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
சுறுக்கமாக தெளிவாக இருப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வோம்.
காப்பி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
ஏற்கனவே மார்கெட்டில் உள்ள, மற்ற கம்பனி பொருட்களைக் கண்டுபிடிப்பில் சேர்த்துக்கொள்ளப் படாது.
கட்டுரை ஆங்கிலம், மலாய்,மெண்டரின் மற்றும் ஜப்பான் மொழியில் இருப்பது அவசியம். (சிக்கலே இதுதான்)
நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.

இதில் காமடி என்னவென்றால், இதன் நோட்டிஸை பொதுவில் பார்வைக்கு ஒட்டிய மறுவினாடி எனக்கு சில அழைப்புகள் வந்தன. ’எழுது எழுது 64இஞ்ச் டீவி உனக்குத்தான்’. கொடுமை.! வெளியூர் டிகிரி வைத்திருப்பவனே திணறுகிறான். நானா...? சான்றிதழ் வேண்டுமானால் கிடைக்கலாம்.!! :)

ஒருவரைப்பற்றி சரியாகத் தெரியாத போதுதான், நம்பிக்கை என்கிற யூகத்தில் சுமைகள் பொதிகளாக ஏற்றிவைக்கப் படுகின்றன.

நிராகரிக்கத் தெரியாதவன் கழுதையாகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக