புதன், மார்ச் 07, 2012

புனைவுப் பின்னணியில்.....

எழுதும் கதைகளை
நிஜமாக்க..
நிஜவாழ்கையே
புனைவுகளுக்கு
தாரைவார்க்கப்படுகிறதா?

கதை நிஜமா அல்லது
நடைமுறையில்
நடந்து விட்டதெல்லாம்
கற்பனையா?

ஒத்து ஊதுவதற்கு
ஆள் சேர்க்கப்படுகிறதா, அல்லது
ஓட்டி ஓட்டி விரட்டியடிப்பதற்கு
ஆள் சேர்கப்படுகிறதா?

எல்லாமும்
நாடகமாய்
நடைமுறையையும்
வேடமுமாய்..!!

கொஞ்சம் தீர்க்கப்பார்வை
தரிசித்து விட்டதால்
நானும் விலகிக்கொள்கிறேன்
சாதாரண வாசகியாய்...

2 கருத்துகள்: