திங்கள், ஜூலை 09, 2012

விசிலடிச்சான் குஞ்சுகள்

ஒத்திகை

கனவிற்கு ஒத்திகை
பார்த்த பின்
விரைவாகவே வருகிறது
உன் நினைவோடு கூடிய
உறக்கம்

%%%%%%%

விசிலடிச்சான் குஞ்சுகள்

மரத்திலிருக்கும் குருவிகளை
`ஈவ் டீசிங் சட்டத்தில்
சிறையில் போடுங்கள்
கிளைகளில் மறைந்துகொண்டு
தினமும் விசில் அடிக்கிறன
என்னைப்பார்த்து...

%%%%%%%

நன்றியாய்..

அதிக உஷ்ணத்தில்
அசைகின்ற என் செடிகள்
நான் ஊற்றிய நீருக்கு
நன்றியாய் தென்றலை வீசிக்கொண்டு...


%%%%%%%

தவிப்புகள்

தவணை முறையில்
வராதே...
தவிப்புகள் கூட 
காலாவதியாகிறது

%%%%%%%

லவ்

ஐ லவ் யூ
சொன்ன அடுத்த வினாடி
அவனே உலகமகா
மன்மதனாகிறான்
அவளின் பார்வையில்..

%%%%%%%%

பின்நவீனத்துவம்

உன் காதலிக்காக
நீ வரைந்த ஓவியத்தை
நானும் காண்கிறேன்
நவீன ஓவியமாக

%%%%%%%%

பதிலுக்காக

எதற்குமே விடைகொடுக்காமல்
கேள்வியாகவே இருக்கின்றாய்
உன்னை நான் தொடர்கிறேன்
என்பதற்காக!!

%%%%%%%%%

கவிக்கரு

உன்
கருவை சுமக்கிறேன்
பிரவத்திற்காக அல்ல
பிறக்கப்போகும் படைப்பிற்காக..!

%%%%%%%%

நான்

என்னை நீ
எனக்காகவே
ஏற்றுக்கொள்ளும்போது
நான்
நானாகவே
பரிணமிக்கிறேன்

%%%%%%%%

எப்படிச்சொல்வேன்

என்ன சொல்ல
எப்படிச் சொல்ல
நீ இல்லாத பொழுது
நல்ல பொழுதாய் அமைய
இறைவனிடம் வேண்டியும்
புரோஜனமில்லாமல்

%%%%%%%

திணறல்

நீரில் மூழ்க மூழ்க
உயிரின் முட்டைகள்
மேலெழுவதைப்போன்ற ஓசையில்
உன்னை அழைக்கிறேன்
பிரிவின் வலியை
நெஞ்சில் அமுக்கிக்கொண்டு

%%%%%%%%

பூக்கின்ற

சொல்வதை ஏற்கிறேன்
பயிற்சியில் போதனைகள்
இலக்கனத்தோடு யாப்போடு..
எளிதல்லவே
உனது பாணி எனக்கு வருவது..!
நீ சிகரம் தான்,
இமயம் தான்
எனக்கு மாலைகள் வேண்டாம்
என் மனதில்
உன் நினைவில் பூக்கும்
ஒரு மலர் வேண்டியே
உன் பின்னே நான்..

%%%%%%%%
 
 
  




12 கருத்துகள்:

  1. சகோ, எல்லாமே கலக்கல் ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  2. கவிதைகள் அனைத்தும் பிரமாதம்........:)

    பதிலளிநீக்கு
  3. மரத்திலிருக்கும் குருவிகளை
    `ஈவ் டீசிங்’ சட்டத்தில்
    சிறையில் போடுங்கள்
    கிளைகளில் மறைந்துக்கொண்டு
    தினமும் விசில் அடிக்கிறன
    என்னைப்பார்த்து... /////////////////////////

    இதனை ஏன் நீங்கள் ஈவ் டீசிங் என எடுத்துக் கொள்கிறீர்கள்....

    பதிலளிநீக்கு
  4. வெட்க வெட்கமா வருகிறதே குருவி.. :)

    பதிலளிநீக்கு
  5. அருமையான சிந்தனைகள்
    தேன் துளிகள் போல்
    ஒவ்வொரு கவிதையும்
    மனமினிக்கச் செய்து போகிறது
    நான் தங்கள் வாசகர் வட்டத்தில்
    சிறு புள்ளியாய்
    இருப்பதில் பெருமை கொள்கிறேன்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி சார். உங்களின் வருகையே எனக்குப் பெருமை. இப்படியெல்லாம் என்னை ஓட்டக்கூடாது. நான் பாவம்.! :(

      இவையெல்லாம் முகநூலில் நான் ஆரம்பகாலகட்டத்தில் பகிர்ந்தவை. இப்போது ஒவ்வொன்றாக தேடி அலசி,திருத்தி, கோர்த்து தொகுத்து கோர்வையாக்கிக்கொண்டிருக்கின்றேன். பிடித்தால் வெற்றியே. இன்னும் இருக்கின்றது.. மெதுவாகப் பகிர்கிறேன்.
      நன்றி பாராட்டிற்கும் வருகைக்கும். வணங்குகிறேன்.

      நீக்கு
  6. melum pakirungal!

    kavithaininikkattum!

    பதிலளிநீக்கு
  7. நீங்களும் எழுத்தாளரென உங்கள் படைப்புகள் சொல்கின்றன.எனவே இன்று முதல் நானும் வாசகனாகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுமதி சார், உங்களின் ப்ளாக் போய் பார்த்துவிட்டு அரண்டு விட்டேன்.. எப்பேர்பட்ட எழுத்தாளர்கள் நீங்கள் எல்லோரும்..! எனக்கு வாசகன் என்பது உங்களின் தன்னடக்கம். நன்றி.

      நீக்கு