திங்கள், ஜூலை 23, 2012

தென்றல்தான்..

நல்லனவை
மென்மையாக வருவதில்லை

கெட்டனவை
புன்னகையோடும் நுழையலாம்

நல்லனவை
வருடும் தென்றலல்ல

கெட்டனவை
புரட்டிப்போடும் புயலும் அல்ல

நீ சிரித்துக்கொண்டே
என்னைக் கொல்லவரலாம்

நான் திட்டினாலும்
உன் தோழியே

6 கருத்துகள்:

  1. வெளி வேஷத்தினை வைத்து யாரையும் புரிந்துகொள்ளமுடியாது. எல்லோருமே முகமூடி அணிந்துதான் வலம் வருகிறோம். குட்.

    பதிலளிநீக்கு
  2. உங்களைப்பற்றி யாரும் தப்பா சொன்னாங்களா?
    நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
    மேற்சென்று இடித்தற் பொருட்டு
    என்று சொல்லிவிடுங்கள் மேடம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குறளுக்குக் கூட நேரிடையாக விளக்கம் புரிந்துக்கொள்ள முடியாமல், குறள் விளக்கம் படித்த பிறகுதான் புரிந்துக்கொண்டேன். நன்றி.

      நீக்கு
  3. நல்லா சொன்னீயல்....வாழ்க்கையின் உண்மையை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ.. :)
      ஆமாம் ஏன் உங்களின் அனைத்து பின்னூட்டங்களும், ஸ்பம் பாஃக்சில் நுழைந்துக்கொள்கிறது? பிரச்சனை எங்கிருந்து வருகிறது. உங்களது மட்டுமே.

      நீக்கு