புதன், பிப்ரவரி 06, 2013

மாமி கதை ( சிரி சிரி)

`இது யார் வீடு?’


`இது நம்ம வீடு.’


`ஓ..அம்மா வீடா?’


`ஆமாம்...’


`நீ இங்கேயே தூங்கும்மா.. நேரமாச்சு எப்படி வீட்டுக்குப்போவ?’


`சரி தூங்கறேன்..’


`உம் புருஷன் பேர் என்னா?’


`நட்ஷணா..’


`ஓ..நட்ஷணா பொண்டாட்டியா நீ..’

`ம்ம்..’

`எங்கே அவன்?’

`தோ, இப்பதானே மேலே போனார்..’

`ஓ, நட்ஷணா, வீடு வாங்கிட்டானா?’

`ம்ம், வாங்கிட்டார்..’

`நல்லா இருப்பானம்மா, எவ்ளோ கஷடப்பட்டான்.., இவ்வளவு பெரிய வீடு இருக்குமா, அவன் வீடு..?

`ஆங்..இவ்வளவு பெரிய வீடுதான்’

`அவனையும் இங்கேயே தூங்கச்சொல்லு..’

`சரி தூங்கச்சொல்றேன்..’

வேலைக்காரியைப்பார்த்து..`அப்போ இவ எங்கே தூங்குவா?’

`அவளும் .. இங்கேயே..’

`அவ..அங்க அங்க மூத்திரம் அடிக்கறாம்மா.. ஒரே நாத்தம்.. வுவக் வாந்தி வருது..’

வாய்விட்டு சிரித்துவிட்டேன்..`ஹஹஹ..அப்படியா?’

`சிரி, நல்லா சிரி.. கிட்டவா ஒரு விஷயம்.. மனசிலேயே வைச்சுக்க....
வீட்டுக்கு யாரோ வந்தாங்க.. அவகூட ரொம்ப நேரம் பேசினா.. இரெண்டுபேரும் நல்லா படுத்து தூங்கினாங்க.. நான் கூப்பிடறது கூட கேட்கல..’

3 கருத்துகள்: