திங்கள், டிசம்பர் 26, 2011

உலகப் புகழ்பெற்ற ஒரு சிறுகதை

படித்ததில் பிடித்தது

நன்றி சுஜாதா.

லாட்டரி

ஒரு அமைதியான கிராமத்தில் ஒரு சாதாரண நாளில் ஒரு அசாதாரண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றுதான் அந்தக் கிராமத்தின் புராதன வழக்கப்படி வருடாந்திர லாட்டரி நடைபெறவேண்டும்.
அதிகாலையிலேயே கிராம மக்கள் அனைவரும் கூடி உற்சாகமாக எதிர்ப்பார்க்க இன்று லாட்டரி யார் பெயருக்கு விழப்போகிறது என்கிற விவாதங்களிடையே ஓரிருவர் இந்தப்பழக்கம் இன்னும் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கிளப்ப பழைய மனிதர்கள், தொடர வேண்டுமென்று அதட்ட இறுதியில், மைதானத்தில் நடுவே ஒரு ஸ்டூலில் ஒரு கருப்புப்பெட்டி வைக்கப்படுகிறது. நடுவர் நியமிக்கப்படுகிறார். அகர வரிசைப்படி கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிரதிநிதி வந்து அந்தப்பெட்டியிலிருந்து சீட்டு எடுத்துப் பிரிக்காமல் காத்திருக்கிறார்கள். எல்லோரும் எடுத்தப் பின் அவரவர் சீட்டைப் பார்த்துக்கொள்கிறார்கள். வெள்ளைச் சீட்டு கிடைத்தவர்கள் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள். ஒரே ஒரு சீட்டில் மட்டும் ஒரு கருப்புப்புள்ளி இருக்கிறது. அது இந்த வருடம் திருமதி ஹட்சின்ஸனுக்கு வருகிறது “சீக்கிரம் முடித்து விடுங்கள்” என்கிறார் கிராமத்துப்பெரியவர். நடுவே ஒரு கற்குவியல். ஆளுக்கொரு கல் பொறுக்கிக்கொள்கிறார்கள். சீட்டு விழுந்த அபாக்கியப் பெண்மணி ”இது அநியாயம்” என்று கதறி மைதான நடுவில் நிற்க, அனைவரும் அவளை கல்லால் அடித்துக் கொல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக