புதன், டிசம்பர் 21, 2011

இவன் யார் ?

பொழுது 
நல்ல பொழுதாகட்டும்! 
என்கிற வாழ்த்தினை
சொல்லியே 
பொழுதை 
பொலிவிழக்கச்செய்தவன்...... 

சாப்பிட்டாயா? 
என்கிற ஒரே கேள்வியை 
அடிக்கடி கேட்டு 
என பசியை 
பிடுங்கிச்சென்றவன்....... 

நலம் பேண்! 
என்கிற சுக 
எச்சரிக்கையால் 
நித்தமும் 
என்னை நோயாளியாக 
மாற்றிக்கொண்டிருப்பவன்........ 

இறைவன் 
என்றும் துணையிருப்பான்! 
என்கிற ஆறுதல் 
வார்த்தையால்.... 
இறைவனையே 
மறக்கச்செய்து 
சதா 
இவன் 
நினைவிலேயே 
மூழ்க வைத்த...ஒரு 
'______________' fill in the blank

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக