செவ்வாய், மார்ச் 20, 2012

அணுவணுவாக....

உன் ஞாபகம் போக்க
எல்லாவற்றிலும் நுழைகிறேன்
வடிவின் சின்னமாய்
அணுவிலும் நீ இருப்பதை
வெளியேறும் போதும்
உணர்கிறேன்

என் காதல்
உன்னை ஒன்றும் செய்யாது
ஏன் தெரியுமா?
அந்த உணர்வு
எனக்கும் எதிரிதான்.!

தவிப்பு வரும் போதெல்லாம்
என்னை நானே
கொலை செய்துகொள்கிறேன்
அருவருப்பில்...

செத்துக்கொண்டிருப்பதால்
மீண்டும் மீண்டும் பிறக்கிறேன்
குழந்தையாகவே..

அதற்காகவே உன்னைப் பிரியேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக