புதன், ஆகஸ்ட் 29, 2012

பொழுது போக்கு

பொழுது போகவில்லை
உன் காதல் கதை வேண்டும்..

உன் மேல் அவன்
உயிராக உள்ளானா?

எப்படியெல்லாம் உன்னைக்
கொஞ்சுகிறான்?

அன்று திட்டிய போது அழுதாயே,
என்ன சமதானம் சொன்னான்?

நீ இல்லையென்றால்
உயிர் வாழ முடியாது என்றா?

நீயும் அதை தானே
சொன்னாய் அவனிடம்?

வயது ஆக ஆக
உன்னின் அழகு கூடுகிறது என்றானே!
பிறகு என்ன சொன்னான்?

வர்ணிக்க வார்த்தைகளே
இல்லையென்றா?

உனக்காக உயிரையே
கொடுப்பானா?

சாப்பிடும் போதும்
அவனையே நினைக்கின்றாயா?

அவனும் தானா...??

அவனை நீ
உயிர் என்பாயா?
ஆத்மா என்பாயா?
ஜீவன் என்பாயா?

அவன் உன்னை என்னவென்பான்?
சிலை?
சிற்பம்?
தேவதை?

ச்சே, இன்று கதையே இல்லை
பொழுது போக்க..

அவளும் வேலைக்கு வரவில்லை
குழந்தைக்கு சுகமில்லை..

அவன் ஊரிலேயே இல்லை
மனைவிக்குப் பிரசவமாம்..!




1 கருத்து: