புதன், ஜூன் 19, 2013

முதுமை

உடலின் நடுக்கத்தில்
நடக்கமுடியாமல்...

உற்கார்ந்தால்
எழமுடியாமல்

உணவுகளை
விழுங்க முடியாமல்
ஜீரணிக்க முடியாமல்....

பார்வைகள்
மங்கிய நிலையில்..

மூத்திர மல நாற்றத்தை
தாமே சகிக்க முடியாமல்..

தமது தேவை என்ன?
தாமே யூகிக்கமுடியாமல்...

பெற்ற பிள்ளைகளை
வதைக்கின்றோமோ...!
என்கிற பரிதவிப்பு ஒருபுறம்

மூளை மட்டும்
தெளிவான நிலையில்
உதிர்த்தது ஒரு வாசகத்தை
திருவாசகமாய்...

இருபது வருடங்களுக்கு முன்
அவருக்க வந்த
மாரடைப்பே மேல்...!!

1 கருத்து: