செவ்வாய், ஜனவரி 24, 2012

சம்பவம்

சம்பவம் நடக்கும் வரை 
போலிஸ் லேசில் பிடிக்காது
நிருபர்கள் பரபரப்புச் செய்திக்காக 
காத்திருக்கிறார்கள்
பத்திரிக்கைகள் அரசியல் செய்த்துக்கொண்டிருக்கு
அரசியல்வாதிகள் ஆளாய்ப் பறக்கிறார்கள்
அடுத்த தேர்தலுக்கு..
கழுத்தில் சின்னதாய் ஒரு தங்கச் சங்கிலி போட்ட
தனி மனிதன் 
தற்காப்பு கருதி
பதுங்கிப் பதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறான்
நாட்டில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக