செவ்வாய், மே 15, 2012

ஆஹா...

எல்லோரும் சொல்வதால்
நானும் சொல்லிச்சென்றேன்
சம்பிரதாய வாசகமொன்றை - ஆஹா.

%%%

கலகம்
கண்ணீர்
சிரிப்பு
சுபம்
முடிவுக்கு வந்தது
பெண் எழுதிய தொடர்கதை

%%%

தவணை முறையில்
வராதே
தவிப்புகள் கூட
காலாவதியாகின்றது

%%%

ஐ லவ் யூ
சொன்ன மறுவினாடி
காதலன் மன்மதனாகிறான்
காதலியின் பார்வையில்

%%%

சொல்லாத வார்த்தைக்கு
முற்றுப்புள்ளியாய்
ஒரு துளி கண்ணீர்

%%%

உஷ்ணம் தாங்காத மரம்
தலையசக்கின்றது
தென்றலாய்..

%%%

அடி வாங்கும்போது
`அண்ணா’ என்கிறான்
வலி பொறுக்காமல் அல்ல..
வீரனின் சொல்லுக்கு
பலியாகாமல் இருக்க...

%%%%


சின்ன மீன் தொட்டியில்
பெண் குழந்தை மீன்களை ரசிக்கின்றாள்
ஆண்குழந்தை தூண்டில் போடுகிறான்
வலை வீசுகின்றான்

%%%





8 கருத்துகள்:

  1. //கலகம்
    கண்ணீர்
    சிரிப்பு
    சுபம்
    முடிவுக்கு வந்தது
    பெண் எழுதிய தொடர்கதை
    //
    அருமை

    பதிலளிநீக்கு
  2. //ஆஹா...
    எல்லோரும் சொல்வதால்
    நானும் சொல்லிச்சென்றேன்
    சம்பரதாய வாசகமொன்றை - ஆஹா.
    //

    அஹா .. அஹா .. ஆனால் இது சம்பிரதாயமாக இல்லை உண்மையாக

    பதிலளிநீக்கு
  3. ராஜா.. சம்பிரதாய எழுத்துப்பிழை- உங்களால் சரி செய்தேன். ஆஹா நன்றி.

    பதிலளிநீக்கு
  4. 1. என்னங்க பண்றது சில நேரங்களில் சம்பிரதாய வார்க்தைகளை பயன்படுத்த வேண்டி இருக்கிறது

    2. எல்லா கதைகளும் சுபத்தில் முடிவதில்லை.

    3. தவிப்புகள் காலாவதி ஆகும்போதுதான் தெளிவு பிறக்கும்

    4. இதுல நான் வீக்கு

    5. அகத்தின் அழுகை முகத்தில்

    6. ஆஹா சம்பிரதாய வார்த்தை

    7. உள்குத்தா? புரியல

    8. ஆண்கள் எப்போதுமே ஆராய்ச்சியாளர்கள். பெண்கள் அழகியலாளர்கள்.

    பதிலளிநீக்கு
  5. பாலா சார்..ஆஹா..ஆஹா..ஆஹா.. நன்றி.

    பதிலளிநீக்கு