வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

பள்ளியறையும் பாமரர்களும்

பள்ளியறை கூட
பலரை
பாமரர்களாக்கி விடுகிறது.

%%%%%

பேசாமல் இருக்கமுடியாது 
என்றல்ல..
நினைக்காமல் இருக்கமுடியாது 
என்பதால்தான்
பேசிக் கொண்டிருக்கின்றோம்

%%%%%%

நல்ல மழை
மழை படாத இடங்களில்
செடிகளுக்கு நீர் பாய்ச்சினேன்
வழக்கம்போல்

%%%%%%%

முதல்வரையும்
குஷ்பூவையும்
கனிமொழியையும்
யாதுமறியா என்னையையும்
யாரவது ஒருவர்
திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்..

%%%%%%%

விளக்கில் 
எழுதிவைக்கிறார்கள்...
வெளிச்சம் 
வெளியேறுகின்றது..

%%%%%%%

செடிகளுக்கு 
நீ பாய்ச்ச
மனமும் ஈரமாகிறது..

%%%%%%%

செடி வளர்த்துப்பார். 
ஒரு குட்டி இலை 
துளிர் விட்டாலும், 
நீ குதூகலிப்பாய்.

%%%%%%%

மேகத்தின் 
நிழல்தான்
கடல்நுரையோ..!

%%%%%%%%

பேரிரைச்சலில் இருப்பவரை, 
`ப்ப்பே’ என்கிற மிரட்டல் 
பயமுறுத்திவிடாது

%%%%%%%

உன் கருத்தில் 
எனக்கு உடன்பாடில்லை.! 
அதேபோல் எனக்கும்தான்.

%%%%%%%

எல்லோரும் 
எழுத்தாளராகிறார்கள்
யார் வாசிப்பது?

%%%%%%%

மனிதர்கள் எல்லோரும் 
ஒரே நிறமாய்
கடலில் உள்ள மீன்கள் மட்டும்
கலர்கலராய்..

%%%%%%

போ, என்றால், 
போகிறேன் என்று, 
மீண்டும் நாளை வந்துவிடுகிறாயே..?

%%%%%%%%

ஒரு பொருளைத் 
தொலைத்து விட்டேன். 
இப்போது அப்பொருள் என் வசமில்லை 
அதில் எனக்குக் கவலையில்லை, 
ஆனால், அதை எங்கு தொலைத்திருப்பேன் 
என்பதுதான் மனதைக் குடையும் வினா..?

%%%%%%%

கைத்தட்டுபவர்களால் தான் 
நல்ல தீர்ப்புகள் 
தடம் புரள்கிறது

%%%%%%%

கண்வலி என்றால், 
கவனம் கண்களைச்சுற்றி..
பல் வலி என்றால்,
கவனம் பற்களைச் சுற்றி..
வயிற்று வலி என்றால்
கவனம் வயிற்றைச்சுற்றி..
மனசு வலி என்றால் மட்டும்
யார் காரணம் என்கிற கேள்வி ஏன்?

%%%%%%%

நீ எங்கிருந்தாலும்
வாழ்த்துவேன்
விசும்பலோடு...

%%%%%%%%

வேலைகளைச் செய்வதற்கு 
நிறைய நாளைகள் இருக்கின்றன. 
படைப்பதற்கு 
இன்றுதான் சிறந்த நாள். 




6 கருத்துகள்:

  1. சிந்தனைப்பூக்கள் அனைத்தும்
    கமகமக்கின்றன
    மனம் கவர்ந்த கவிதைகள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல மழை
    மழை படாத இடங்களில்
    செடிகளுக்கு நீர் பாய்ச்சினேன்
    வழக்கம்போல்
    ///////////////////////

    இதை என்னவென்று சொல்லுவது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டிற்குள் நிறைய செடி இருக்கு என்று அர்த்தம் குருவி

      நீக்கு
  3. ///
    செடி வளர்த்துப்பார்.
    ஒரு குட்டி இலை
    துளிர் விட்டாலும்,
    நீ குதூகலிப்பாய்.
    //

    உண்மை! அனைத்தும் செமையான கவிதை!

    பதிலளிநீக்கு
  4. எல்லாமே அருமை. நான் மிகவும் ரசித்த இரண்டு....

    //செடி வளர்த்துப்பார்.
    ஒரு குட்டி இலை
    துளிர் விட்டாலும்,
    நீ குதூகலிப்பாய்.//

    //கண்வலி என்றால்,
    கவனம் கண்களைச்சுற்றி..
    பல் வலி என்றால்,
    கவனம் பற்களைச் சுற்றி..
    வயிற்று வலி என்றால்
    கவனம் வயிற்றைச்சுற்றி..
    மனசு வலி என்றால் மட்டும்
    யார் காரணம் என்கிற கேள்வி ஏன்? //

    தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு