திங்கள், ஏப்ரல் 22, 2013

பள்ளியாசிரியர்கள்.

எங்கள் ஊரில் தமிழாசிரியர்கள் (தமிழ்ப்பள்ளியில் போதிப்பவர்கள்) நிறைய பேர் எழுத்தாளர்களாக பவனி வருகிறார்கள். இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அவர்களின் தமிழ்மொழி ஆற்றல் இயற்கையிலேயே அற்புதமாக அமைந்துவிடுவதுதான். 

இருப்பினும், அவர்களின் சிறுகதைகளை வாசித்தோமென்றால் எல்லோரும் ஒரே மாதிரியான சிந்தனைச் சூழலில் சிக்குண்டுதான் கதைகளைப் புனைந்திருப்பார்கள்..

உதாரணத்திற்கு மாணவனின் புறத்தோற்றம், படிப்பில் கவனமின்னை, பெற்றோர்களின் ஆடைகள் (அழுக்கான உடைகளில் பள்ளிக்கு வருவதால் அவமானம்) பெற்றோர்கள் முடி வாறியிருக்கும் பாணி, பெற்றோர்களின் நாக்கு முக்கா ரிங்டோன், சத்தம் போட்டுப்பேசும் பெற்றோர்கள் (அநாகரீகமாம்!) குளிக்காமல் பள்ளிக்கு வரும் பெற்றோர்கள், குழந்தைகளின் வளர்ச்சியை பள்ளியில் வந்து கண்டுகொள்ளாத நிலை. (மலாய்,சீனப் பள்ளியில் - உடனே கண்டனக்கடிதம் வரும், தமிழ்ப்பள்ளியில் என்னைப்பொருத்தவரையில், எனக்கு வந்ததேயில்லை, அழைப்பு விடுவார்கள்.. மகன் ரொம்ப குறும்பு என.) பிள்ளைகளின் பேக் சரியில்லை.. தூய்மையில்லை.. பெற்றோர்கள் ரௌடிகள்...அது இது என, தமது கதைகளின் கதை மாந்தர்களாக இவரகளை வைத்து கதைதனை வடித்து விடுவார்கள். அல்லது பள்ளியில் நடக்கும் அரசியலை நுழைத்து அது சரியில்லை இது சரியில்லை என்கிற புராணத்தைச் சொல்ல ஆரம்பிப்பார்கள்...

அதாகப்பட்டது, கதைகளின் கரு என்னவென்றால், எல்லா அவலத்திற்கும் யாராவது இருப்பார்கள் பின்னணியில், அந்த  ஆசிரியரைத்தவிர. !!!?? அவர் மட்டுமே நல்லவர் அங்கே. போதிக்கின்ற வேலைகளை விட்டுவிட்டு அவலங்களைக் கண்காணிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

மாணவர்களின் கல்வி மற்றும் பொது அறிவு வளர்ச்சியில், அந்த ஆசிரியர் ஆற்றிக்கொண்டிருக்கும் அரிய பங்கு பற்றிய அற்புதமான கதைகளை நான் இதுவரையில் வாசித்ததில்லை. (இருக்கலாம், என் கண்ணில் இன்னும் படவில்லை).

சமூதாய அக்கறை அதிகம் உள்ளவர்கள் ஆசிரியர்கள். அதைவிட முக்கியம் மாணவர்களின் வளர்ச்சி.
 

9 கருத்துகள்:

  1. விஜி இந்தக் கதையை படித்துப் பாருங்களேன்கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன

    கோ.புண்ணியவான்

    ராணியின் அப்பா லமர முனீஸ்வரர் லயத்துக்கு நேந்துவிட்ட கடா டு, முனியம்மா வீட்டுக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம் எங்கோ மலாய் கம்பத்திலிருந்து, அதன் சொந்தக்காரன் சொன்ன கிரயத்துக்கே http://thinnai.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிங்க் கொடுங்கள் சார். திண்ணையில் எங்கே தேடுவது?

      நீக்கு
    2. படித்தேன்.. நன்றி சார். அருமை. இதுதான் இங்கே நடக்கும் கூத்து, என்ன செய்ய..!

      நீக்கு
  2. ரைட்டு , ஃபாண்ட் சைஸ் சின்னதுல இருந்து நார்மல் மாற்றவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க என்ன சொல்லவறீங்கன்னு எனக்கு சரியாகத்தெரியவில்லை

      நீக்கு
  3. >> ஒப்புதலுக்கு பின்னர் உங்கள் கருத்துரை காண்பிக்கப்படும்.

    ஹி ஹி

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவின் எழுத்துரு அளவு சிறியதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் இருந்து காப்பிபேஸ்ட் செய்தேன்.. அதனால் சிறிதாக உள்ளது. ஏன் என்று தெரியவில்லை. நன்றி வருகைக்கு

      நீக்கு