செவ்வாய், நவம்பர் 22, 2011

சம்பளம்

இன்று சம்பள நாள். 
மாத முழுவதும் வேலை செய்து அதற்கான ஊதியத்தை மாத இறுதியில் பெற்றுக்கொள்கிறோம். சம்பளம் போட்டவுடன், பல செலவுகளின் பட்டியல்கள், இதற்கு..இதற்கு..இதற்கு.., மீதம் இருக்குமா என்றால், பலரிடமிருந்து ‘எங்கே...’ என்கிற இழுவைதான் பதிலாக அமையும். நடுத்தர வர்கமாயிற்றே நாம்,என்ன செய்வது.!!?

சரி விசயதிற்கு வருவோம்.. 
நம்மில் எத்தனை பேர் (பெச்சலர்கள் வேண்டாம்), நமது ஊதியதிலிருந்து ஒரு சிறிய தொகையை, நமக்காக, நமது ஹோபிக்காக செலவு செய்கிறோம்.. (புகை, மதுபானம்.. இதில் சேர்த்துக்கொள்ளவேண்டாம்).

உதாரணதிற்கு: மாதம் ஒரு முறை ,வித வித மான செடிகளை வாங்குவது, புதிய ஆடை ஒன்றாவது வாங்குவது, சினிமா செல்வது, புத்தகங்கள் சேகரிப்பது, அலங்காரப்பொருட்கள் வாங்கிவைதுக்கொள்வது, ஒப்பனைப்பொருட்க்ள், அணிகலன்கள், கைப்பைகள், காலணிகள் என இப்படி எதாவது இருக்கும்.. கண்டிபாக இருக்க வேண்டும்., இல்லையேல் உழைப்பதில் அர்த்தமில்லமல் போய்விடும்.

அப்படி ஒரு ஹோபி எனக்கும் உண்டு.. ஒரு சிறிய தொகையை (10%) நான் எனக்காகவே செலவு செய்வேன். ஆனால் எதற்கு செலவு செய்வேன், என்று மட்டும் சொல்லமாட்டேன். 
நீங்கள் யோசிக்கலாம்....பகிரலாமே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக