செவ்வாய், நவம்பர் 22, 2011

இசைக் கச்சேரி

இப்போதெல்லாம், திருமண விருந்திற்குச் சென்றால், நிம்மதியாக உறவினர்களோடு அளவளாவ முடியலங்க. அங்கு தான் பல நாள் சந்திக்காத உறவுகளைச் சந்திக்கின்ற வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.. அவர்களோடு கொஞ்ச நேரம் மகிழ்ச்சியாகப் பேசலாம் என்றால், சந்தையில் கூவி, கூச்சல் போடும் மீன் வியாபாரி போல் காட்டுக் கத்து கத்தவேண்டியுள்ளது....!
இசை நிகழ்வு, இசை விருந்து என்கிற பெயரில் அதி வேகமாக ஒலிக்கும் விருவிருப்பான பாடல்கள் காதுகளைக் கிழிக்கின்றன. உணவு கூட இறங்க மாட்டேன் என்கிறது.
ஒரு ஆசிரியரிடம் என்னை அறிமுகப்படுத்தினாள் என் தங்கை, அவர் என் காதில் கத்த, நான் அவர் காதில் கத்த.. தர்மசங்கடம் தான் போங்க..! இறுதிவரை என்ன பேசினோம் என்பது இன்னும் எனக்கு சரியாகப் புலப்படவில்லை... 
மெல்லிசையா மெதுவாக ஒலிக்கும் பாடல்களைப் போட்டு, விருந்துகள் நடைபெற்றால் நமது கலாச்சாரத்திற்கு பாதிப்பு வந்து விடுமா என்ன! 

என்ன கொடுமை இது.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக