செவ்வாய், நவம்பர் 22, 2011

மனசாட்சி

நீ
நல்லவளா?
இல்லையே, திடீரென்று பயங்கர
கோபம் வருமே...!

அப்படியென்றால், கெட்டவள்?
இல்லையே., துரோகம் செய்தவர்களையும்
மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளேனே...!

அப்படியென்றால், ஒரு கோழை
இல்லையே, எந்தப் பிரச்சனையும் என்னை
ஒன்றுமே செய்யவில்லையே..!

அப்படியென்றால், அடிமையோ?
இல்லையே, போராடிப்பெறுவதை
பெருமையாக நினைப்பவள் ஆயிற்றே..!

அப்போ நீ ஒரு போராட்டவாதி?
இல்லையே, பல வேளைகளில்
நமக்கேன் வம்பு என விலகியுள்ளேனே..!

ம்ம்ம்ம்..சுயநலவாதி?
இல்லையே, பல சந்தர்ப்பங்களில்
பிற்ருக்காக கண்ணீர் விடுபவள்...!!

.....ச்சே, எப்படியாவது போ
இனி என்னிடம் எதுவும் கேட்காதே...!
விடைப்பெற்றது, மனசாட்சி.

(சிற்றிதழில் வந்தது- நன்றி தென்றல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக