திங்கள், ஜூலை 02, 2012

விளிம்பினிலே...

படிப்பதற்கே பொழுதில்லை
பாதிப்பொழுது பணியிடத்தில்
மிதிப்பொழுத்து குடும்ப சிக்கலில்
பார்வையெல்லாம் பெருமூச்சாய்..
நிறைவேறா ஆசைகள் ஒரு பக்கம்
சினிமா காட்டும் புதுமைப் பெண்களிடம்
சில குறிப்பு..
இயக்குனர்கள் சொன்ன வசனங்கள் சில
பக்கத்து வீட்டுப்பாட்டியிடம் சில கதை
கொஞ்சம் ஊர்கதை
தத்துவங்கள் சில
அறிவுரைகள் பல
ஆங்காங்கே திருக்குறளையும்
சேர்த்துக்கொள்ளலாம்..
கால்களில் சக்கரங்கள்...
செயற்கை இறக்கைகளோடு
மிதமிஞ்சிய கற்பனையில்
இலக்கியவானில் மிதந்துகொண்டிருக்கும்
தொடர்கதை பாவைகள்
விட்டுச்செல்கின்றனர்
எச்சங்களை மிச்சமாய்..                                                                               

2 கருத்துகள்: