திங்கள், நவம்பர் 28, 2011

கலகம் செய்


சொன்ன வாக்கை உடனே 
காப்பாற்றிவிட்டால்..

எதற்கும் பயமில்லாதது போல்
காட்டிக்கொண்டால்...

எதுவும் நடவாததுபோல்
அமைதிக்காத்து வருவதால்...

கோபமே வராத புத்தர் போல்
நடித்துக்கொண்டால்..

எல்லாவற்றிற்கும் ஒரு புன்னகையையே
பரிசாக தந்துவிட்டால்..

யோசித்து உருப்படியாக எதாவது
செய்யலாம் என திட்டம் தீட்டிக்கொண்டால்..

மனதில் வ(டி)ருவதற்கு, வடிதட்டு
தேடிக்கொண்டால்..

சுற்றும் முற்றும் பார்த்துப் பேசும்
பழக்கம் வைத்துக்கொண்டால்..

சிந்தித்துச் சிந்தித்து நம்மை நாமே
சின்னாப்பின்னமாகிக்கிக் கொண்டால்..

அவர் போல், இவர் போல்
என ஒப்பிடுதல் செய்துக்கொண்டால்..

பழைய புத்தகங்களைப் புரட்டி
கருத்துப் பகிர்வதால்..

பிறர் சொல்கிற பேச்சுக்கெல்லாம்
செவி சாய்ப்பதால்..

சதா பிழைத்திருத்தம்
செய்தவண்ணமாக இருப்பதால்..

அன்பு என்கிற பெயரில் ஆட்டிவைக்கும்
சிலரின் கருவியாவதால்...

அடிமைப்படுத்த விட்டு
வேடிக்கைப் பார்த்துக்கொண்டேயிருப்பதால்..

நம் பதிவுகளுக்கு
கமெண்ட்ஸ்’களை எதிர்ப்பார்ப்பதால்

அழுது அடம்பிடிக்கும்
நம்மிடமுள்ள குழந்தையை
நாம் எப்போது வெளிக்கொணர்வது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக