திங்கள், நவம்பர் 28, 2011

சில உளறல்கள்

அழுது அடம்பிடித்து 
கெ(கொ)ஞ்சி 
பால் குடிக்கும் 
பச்சைக்குழந்தையைப் போல... 
காதலிக்குக் காதலன். 

பழக்கப்பட்ட 
சுவர் தான் 
காயம் பட்டு 
தவிக்கிது.!

இசையிலிருந்து 
இச்சைவரை 
ஆண் பெண் 
சேர்க்கையே 
இயற்கை அழகு

உன்னை விரும்புவதால் 
என்னை நேசிக்கின்றேன் 
யாரையும் வெறுக்காமல்

காதலர் தினம் 
எத்தனை 
ரோஜா 
யார் யார் 
காதிலோ?

விலையேற்றம் 
காதலர் தினத்தில் 
கேட்கமாட்டேன் 
உன்னிடம் ஒரு ரோஜா 
எனக்குத் தெரியும் 
நீ ஏழை என்று 
காதலைக்கொடுப்பதிலும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக