வியாழன், நவம்பர் 24, 2011

ஜெயராமன்

மழை சாரலில் 
முந்தானை 
குடையில் 
உரசிக்கொண்டே...
உதடுகள் 
உரசாமல்
பேசி சென்றோமே...!!!
பட்டு தெறிக்கும்
துளிகளெல்லாம்
மோட்சம்
அடைந்ததாய்
சொல்லி
சென்றதே...
தெருவோர
தேநீர் கடையில்
ஆவி பறக்க
ஒன்றாய்
குடித்த
தேநீர்
அன்று ஏனோ
அதிக சுவையுடன்....!!!
தினமுமாய்
இது நடக்காததென
மழையிடம்
முறையிட்டேன்
தினமும் நீயே
வருவாயென...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக