ஞாயிறு, நவம்பர் 27, 2011

கனவுகளின் மீள்பார்வை

எனக்கு பத்து வயது இருக்கும் போது, ஒரு பாழடைந்த வீட்டுப் பக்கத்தில் உள்ள் பூச்செடியில் சாமிக்குப் பூ பறிந்து வருவேன். 

இதில் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் ஒரு நாள் (அப்போது) ஒரு கனவு வந்தது..:- 

எங்க இடத்தில் ஏற்கனவே அநாதையாக இருந்து, இறந்த ஒரு கிழவியின் ஆவி அந்த வீட்டில் இருந்துக்கொண்டு, நான் பூப்பறிக்கப்போகும்போதெல்லாம் என்னையே பார்த்துக்கொண்டும்.. கனகொடூரமான குரலில் “ ஏய் நீ என் பாதையில் நடக்காதே’’..என ஓலமிட்டது பிறகு ஒப்பாரியிட்டது. கனவிலேயே அலறினேனாம், அம்மா சொன்னார்..

அதன் பிறகு நான் அந்தப்பக்கம் பூபறிக்கபோவதை நிறுத்திவிட்டேன்.!

அந்த கனவு இன்னமும் மனதில், ஏன்னா சிறுமியான எனக்கு, அப்போது அச்சம்பவம் மனதை அதிகமாகவே பாதித்திருந்த்தது.

நேற்று ஒரு புத்தகம் படிக்கும் போது, இந்த நிகழ்வு அதில் இடம்பெற்றிருந்தது.. நிகழ்வு என்பதைவிட.. கனவில் வந்த அந்த வார்த்தை என்பது சரியான விளக்கமாகக்கொள்ளலாம். (என்னன்னு சொல்ல???)